தமிழ்நாடு வெள்ளை அறிக்கைகள் இரண்டையும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஒப்பீடு செய்து உள்ளார். 2021 வெள்ளை அறிக்கை… 2021-ல் புதியதாக பொறுப்பேற்ற திமுக அரசு, முந்தைய அதிமுக ஆட்சியிடமிருந்து பெற்ற நிதிநிலையை விளக்க வெள்ளை அறிக்கை வெளியிட்டதாக கூறினார். அதன் முக்கிய அம்சங்கள் என்ன என்பதையும் குறிப்பிட்டார். மாநிலத்தின் மொத்தக் கடன் சுமார் ரூ.5.70 லட்சம் கோடி. வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்திருந்தது. நிதிப் பற்றாக்குறை மாநில நிதியை அழுத்தத்திற்குள் தள்ளியிருந்தது. மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் கடன்கள் கவலைக்குரிய நிலையில் இருந்தன.
அரசின் வருவாயில் பெரும் பகுதி வட்டி மற்றும் சம்பளச் செலவுகளுக்கே சென்றது. “நிதி ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” என்ற எச்சரிக்கை பதிவு செய்யப்பட்டது என கூறினார். தொடர்ந்து, 2026-ல் புதிய அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை, 2021-26 காலகட்ட நிதிநிலையை மதிப்பீடு செய்கிறது. இதன் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை கூறினார்.

மாநிலத்தின் நேரடி கடன் சுமார் ரூ.10 லட்சம் கோடி அரசு உத்தரவாதங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் கடன்கள் உள்ளிட்ட மொத்தப் பொறுப்புகள் ரூ.13.18 லட்சம் கோடி. வருவாய்ப் பற்றாக்குறை சுமார் ரூ.78,000 கோடிக்கு மேல். நிதிப் பற்றாக்குறை ₹1.33 லட்சம் கோடி.
இதையும் படிங்க: உங்கள் தவறை மறைக்க காங்கிரஸ் பலிகடாவா.? திமுகவை பந்தாடிய மாணிக்கம் தாகூர்..!
வட்டி செலவினம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று கூறினார். மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் நிதிநிலை இன்னும் சவாலாக உள்ளது. மாநிலத்தின் நிதி நெகிழ்வுத்தன்மை குறைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். வெள்ளை அறிக்கையின் நோக்கம் அரசியல் அல்ல என்று கூறிய மாணிக்கம் தாகூர், மாநிலத்தின் உண்மையான நிதிநிலையை மக்களிடம் வெளிப்படையாக வைப்பதுதான் என்றும் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாட்டின் பொருளாதார நிலையை மக்கள் அறிந்திருப்பது ஜனநாயகத்தின் அடிப்படைத் தேவை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அறிவிப்பு செயலாகும்போது தான் மாற்றம்..! மூடப்பட்ட 717 மதுக்கடை லிஸ்ட்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!