தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் சீமை கருவேலை மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்க வைகோ, மேகதாது அணை விவகாரத்தில் முழுக்க முழுக்க நமக்கு கேடு விளைப்பது கர்நாடக அரசு அல்ல, மத்திய அரசுதான், இந்த விவகாரத்தில் பில்லரே மத்திய அரசுதான்.
2014ல் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து கட்சிகளின் கூட்டத்தை மத்திய அமைச்சர் ஆனந்த குமார் வீட்டில் 2 நாட்கள் நடத்தப்பட்டது, இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜவடேகர் கலந்து கொண்டு சதி திட்டம் தீட்டினார்கள். மத்திய அரசு நாங்கள் வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம், ஆனால் நீங்கள் அணை கட்டுவதற்கான வேலைகளை பாருங்கள் என சதித்திட்டம் தீட்டினார்கள்
மேகதாது அணை கட்டினால் தஞ்சை மாவட்டம் பஞ்ச பிரதேசமாக மாறும் என அப்போதே நான் எதிர்த்தேன். மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பையும் மீறி அணை கட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் போல் தமிழகம் கொந்தளித்து எழுந்து பெரும் கிளர்ச்சியை நடத்தினாலும் மத்திய அரசு கவலைப்படாமல் அணை கட்டினால் கட்டட்டும் என வேடிக்கை பார்க்கும்.
இதையும் படிங்க: மதிமுகவை முடித்துக்கட்ட திட்டமிடும் மு.க.ஸ்டாலின்?! கட்சி தாவ தயாராக இருப்பவர்களுக்கு க்ரீன் சிக்னல்!

தற்போது கர்நாடகாவில் உள்ள முதல்வர் வெறி பிடித்தவர். மேகாது அணை தமிழகத்திற்கு பேராபத்தாக முடியும். ஒரு மாத கால தவெக ஆட்சி அருமையாக உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் காலகாலமாக எல்லா ஆட்சிகளிலும் நடைபெற்று வருகிறது
இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். மத்திய அரசு அதுபோன்ற சட்டங்களை அங்கீகரிக்க வேண்டும். ஜாமீனில் அவர்களை நீதிபதிகள் விடக்கூடாது. வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவித்தால் தான் அந்த மிருகங்களுக்கு கொஞ்சம் பயம் வரும்.
30 நாட்களில் மட்டும் நடக்கவில்லை, மிருகங்களைப் போல் உலவும் நபர்கள் அனைத்து ஆட்சிகளிலும் இருக்கிறார்கள். அதற்கு இந்த அரசு பொறுப்பல்ல. உள்ளாட்சி தேர்தலில் மதிமுக தவெக கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த வைக்கோ. உள்ளாட்சி தேர்தலில் மதிமுக கூட்டணி குறித்து யோசிக்கவே இல்லை.
பொதுக்குழுவை கூட்ட வேண்டும், இதுவரை நடந்த நிகழ்வுகளை பற்றி ஆலோசிக்க வேண்டும், எவ்வளவு விசுவாசமாக இருந்து திமுகவிற்கு பாடுபட முடியுமோ அவ்வளவு விசுவாசமாக இருந்து திமுகவினரை வெற்றி பெற செய்துள்ளோம். மற்றவர்கள் முடுவெடுத்து ஆளும் ஆட்சியில் சேர்ந்துள்ளார்கள்.

நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை எந்த முடிவும் சொல்லவில்லை. சமூக வலைத்தளங்களில் திமுகவினர் எங்களை காரணமில்லாமல் எங்களை நிந்திப்பது, எங்கள் மீது பழி தூற்றுவது போன்ற செயலை செய்து வருகிறார்கள். நாங்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை, இதற்கு நாங்கள் பழக்கப்பட்டவர்கள்.
நானும் யாரைப் பற்றியும் பேசவில்லை, கருப்புக்கொடி போராட்டத்தில் கூட டாக்டர் கலைஞர் திருவள்ளுவருக்கு செய்த பெருமையைப்பற்றி தான் பேசினேன். வரும் 27ம் தேதி பொதுக்குழு கூடி எல்லா நிலைமைகளையும் கருத்துக்களாக பரிமாறப்பட்டு அதற்கு பின்னர்தான் எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம்
இதையும் படிங்க: "ஆச்சரியமே இல்ல"..! வைகோ பேச்சு எதிர்பார்த்தது தான்... லியோனி கருத்து..!!