நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை போராடிய மாணவி அனிதாவின் நினைவுநாள் இன்று. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவியான அனிதா, பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றபோதும் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மருத்துவப் படிப்பு வாய்ப்பை இழந்தார். நீட் தேர்வு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அவர், இறுதியில் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
அவரது மரணம் தமிழகத்தில் நீட் எதிர்ப்புப் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. அன்றிலிருந்து இன்றுவரை அவரது நினைவுநாள் நீட் எதிர்ப்பு நாளாகக் கருதப்பட்டு வருகிறது.இந்நிலையில், சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசும்போது அனிதாவின் நினைவைப் போற்றினார். நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் பல மாணவர்கள் தங்கள் கனவுகளை இழந்ததை நினைவுகூர்ந்த அவர், அனிதா உள்ளிட்ட மாணவர்களின் தியாகத்தை வீணாக்காமல் போராட்டத்தைத் தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.

மாநில அரசு பலமுறை நீட் ஒழிப்புக்கான தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தாலும், மத்திய அரசு அதற்குச் செவிசாய்க்காத நிலை தொடர்வதை சுட்டிக்காட்டினார்.2029 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சூழ்நிலை மாறும்போது, நீட் தேர்வை நாடாளுமன்றத்திலிருந்து தூக்கி எறியும் நாளாக அது மாறும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உறுதியளித்தார். தங்கை அனிதா கண்ட கனவு நிச்சயம் ஒருநாள் நிறைவேறும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தின் குரல் வேறு, டெல்லியின் குரல் வேறு எனக் கூறிய அவர், கிராமப்புற மாணவர்களுக்கும் ஏழை மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் வகையில் நீட் ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அன்று செங்கோட்டையன்.. இன்று ஆதவ் அர்ஜூனா! மீண்டும் இடம் மாறி அமர்ந்த விஜய்!! என்னவா இருக்கும்..??
அனிதாவின் போராட்டம் வெறும் தனிப்பட்ட கனவாக அல்லாமல், சமூக நீதிக்கான போராட்டமாக மாறியது. அவரது நினைவுநாளில் அமைச்சரின் இந்த உறுதிமொழி, தமிழக மாணவர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 2029 தேர்தல் முடிவுகள் நீட் கொள்கையில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பு இப்போது வலுப்பெற்றுள்ளது. அனிதாவின் கனவு நிறைவேறும் நாள் வரும் என அரசு உறுதியளித்துள்ள நிலையில், அந்த நாளை நோக்கி தமிழகம் தொடர்ந்து போராடும் என்பது தெளிவாகிறது.
இதையும் படிங்க: "தம்பி இன்னைக்கு இல்ல.. சீக்கிரம் முடிச்சிடுவோம்-னு நெனச்சேன்"... ஆதவை வம்பிழுத்த பிரேமலதா..!