தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை பாஜக தான் என்பது அனைவருக்கும் தெரியும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். திமுக கூட்டணி கட்சிகளை அடிமை கட்சிகள் என விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். நல்லுறவோடு இருக்கும் கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து இருப்பதாகவும் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட அனுமதித்து இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
பீகாரில் நிதீஷ் குமாருக்கு வந்த நிலை அதிமுகவிற்கு வரும் என்றும் அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார். மோடியா இந்த லேடியா என்று ஜெயலலிதா கேட்டு தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு சவால் விட்டதாகவும், ஆனால் மோடி தான் எல்லாம் என்று சொல்லி ஜெயலலிதாவின் ஆன்மாவை சாகடிக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்று விட்டார் எனக் கூறினார்.

டெல்லி பாஜகவுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று சொல்லிக் கொண்டே மீண்டும் மீண்டும் அடிபணிந்து கொண்டிருக்கிறார் என்று விமர்சித்துள்ளார். இந்த நேரத்தில் தான் டெல்லிக்கு தமிழ்நாடு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார். இந்த தேர்தல் மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்றும் மீண்டும் திராவிட மாடல் 2.0 முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்கள் நீதி மய்யம் போட்டியிடனும்... டார்ச் லைட் சின்னத்தை கொடுங்க..! போர்க் கொடி தூக்கிய திருமா..!!
எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும் திமுக சார்பில் அமைக்கப்பட்ட அணியுடன் கூட்டணி கட்சிகள் சேர்ந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மனம் ஒத்த கூட்டணியாக திமுக கூட்டணி இருப்பதாகவும் தன்மானத்தோடு அமைக்கப்பட்ட கூட்டணி திமுக கூட்டணி என்று தெரிவித்தார். தேமுதிக அங்கீகரிக்கப்படாத கட்சி அந்த கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள சீட்டு குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து பேசி இருந்தார். அதற்கு பதில் அளித்த அவர் எதிர்க்கட்சியாக இருந்தது தேமுதிக என்றும் அவர்களை நிரூபிக்க வேண்டிய நேரம் இது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானது... அயராமல் உழைக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்..!!