தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் திமுக பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில், கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று காலை 10.30 மணிக்கு கலைஞர் அரங்கத்தில் தொடங்கிய இந்தக் கூட்டம், கட்சியின் தேர்தல் பின்னடைவை முழுமையாக மதிப்பீடு செய்து, அடுத்தகட்ட அரசியல் உத்திகளை வகுப்பதில் கவனம் செலுத்துகிறது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையின்படி, அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
தேர்தல் முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தலைமையிலான கூட்டணி 108 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், திமுக சுமார் எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த தேர்தலில் திமுக பெரும் சரிவை சந்தித்தது. இந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டு மக்களை இதிலிருந்து எப்படி மீட்க போகிறோம் என்பதை பற்றி யோசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி என்றும் கூறினார். சுனாமி என்றால் சாகசமோ சாதனை கிடையாது பெரும் பாதிப்பு எனவும் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு நிர்வாகிகளிடமும் பேசி 20 நாட்களில் அறிக்கை அளிக்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் தேர்தல் தோல்வி குறித்த தொகுதி வாரியாக ஆய்வு நடத்தி அறிக்கை தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பின்னடைவுக்கு என்ன காரணம்.? திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மா.செ. கூட்டம்..!
நமது கூட்டணி கட்சிகளை வைத்தும் அதிமுகவை உடைத்தும் பெரும்பான்மை நிரூபித்து விட்டார்கள் என்றும் தோல்வியின் போது ஆதங்கத்தை கொட்டுவது இயல்பானது தான்., ஆனால் அது பழியாக இருக்கக் கூடாது எனவும் தெரிவித்தார். விரைவில் கட்சியை சீரமைத்து புது எனர்ஜி கொடுக்கும் என்றும் உறுதிப்படுத்த தெரிவித்துள்ளார். விசாரணை குழு, வெப்சைட் வாயிலாக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆலோசனைகளை வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தலைக்கீழான கொளத்தூர் தொகுதி..! 500க்கும் மேற்பட்ட திமுகவினர் தவெகவில் ஐக்கியம்..!