வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

இதற்காக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.25 மணிக்கு சாய்நகர் சீரடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். அந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு மதியம் 12.10 மணியளவில் வந்தடைந்தது.
இதையும் படிங்க: சமூக நீதி பாதுகாவலர்.. கலைஞரின் அன்பு நண்பர் அவர்.. வி.பி.சிங் வரலாற்றை நினைவுக்கூர்ந்த உதயநிதி..!

பின்னர் முதலமைச்சர் ரோடு ஷோ நடத்தினார். வழிநெடுகிலும் காத்திருந்த மக்கள் பூக்களை தூவி முதல்வரை வரவேற்றனர். முதல்வரின் வருகையை ஒட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.198 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மேலும், ஒரு லட்சம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 2025-26 கல்வியாண்டு முதல் செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் அறிவாலயம் மற்றும் திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: நான் உங்களில் ஒருவன்... மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியே தீருவேன்... சபதம் எடுத்த முதல்வர் ஸ்டாலின்!