தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும் ஆனால் அது மாநாடாக அமைந்து விட்டது என்று தெரிவித்தார். இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடக்காத அளவுக்கு இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்றார்கள் என்றும் நிச்சயமாக தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் உறுதியுடன் தெரிவித்து உள்ளார்.
தே.மு.தி.க. மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் அணி தங்களது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதில் கிடைக்கும் என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முழுக்க முழுக்க பொய் தகவல்களை வழங்கி வருவதாகவும் தேர்தல் வருவதால் திமுகவுக்கு பயமும் நடுக்கமும் வந்துவிட்டதாகவும் விமர்சித்தார்.

பழைய டென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதாக கூறிவிட்டு அரசு ஊழியர்களை ஏமாற்றி விட்டதாகவும் இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு திருநெல்வேலி அல்வாவை முதலமைச்சர் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். யாரையும் யாருக்கும் அடிமையாக வைக்கும் கட்சி பாஜக இல்லை என்றும் அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அவ்வளவு என்ன மெத்தனம்? காலி பணியிடங்களை குறிப்பிட கூட நேரமில்லையா? நயினார் சரமாரி கேள்வி..!
எத்தனை மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவருக்கு தெரியாது என்றும் விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பாஜகவில் ஊழல் இல்லை நாங்கள் தீய சக்தி இல்லை என்றும் எனவே பாஜகவை பற்றி விஜய் பேசி இருக்க மாட்டார் எனவும் கூறினார். டிடிவி தினகரன் மீண்டும் தங்கள் கூட்டணிக்கு வந்தது குறித்து குறிப்பிட்டு பேசிய நயினார் நாகேந்திரன், அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்று கலைஞர் கருணாநிதி கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: ஷாக்க கொர..! சிங்கத்தைப் பார்த்து சிறு நரிகளுக்கு அல்லு.! அலறுது அறிவாலயம்.. விளாசிய நயினார்..!