காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள சென்னையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது தொடர்பாக, கடந்த மே மாதத்திற்குப் பிறகு தமிழ்நாடு அரசிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் வரவில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் நாடாளுமன்றத்தில் பரபரப்பானத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் களத்தில் திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய இணையமைச்சர், ஒரு மாநிலத்தில் புதிய விமான நிலையத் திட்டங்களைச் சாத்தியப்படுத்திச் செயல்படுத்துவதற்கான முழத்துப் பொறுப்பும் சம்பந்தப்பட்ட மாநில அரசு மற்றும் விமான நிலைய மேம்பாட்டாளரையே சாரும் என்று தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: காகிதத்தில் தான் நடவடிக்கை இருக்கா? தெரு நாய் பிரச்சனையில் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!
மேலும், புதிய விமான நிலையங்களை அமைப்பதற்கான நிலக் கையகப்படுத்துதல் பணிகள், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த தேவையான சட்டப்பூர்வ அனுமதிகள் பெறுதல் மற்றும் திட்டத்திற்கான நிதி ஏற்பாடுகளைச் செய்தல் போன்ற முக்கியக் காரணிகளைப் பொறுத்தே அத்தகைய திட்டங்களின் அடுத்தகட்ட நகர்வுகளும் செயல்பாடுகளும் அமையும் என்று மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘நீங்கள் அவை தலைவருக்கு உத்தரவிட முடியாது’! கார்கேவுக்கு கிரண் ரிஜிஜு பதிலடி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!