ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சைப்ரஸுக்கு சென்ற நமது பிரதமர் மோடி சென்றுள்ளார். லார்னாகா ஏர்போர்ட்டில் சைப்ரஸ் அதிபர் நிகோஸ், அந்நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் அவரை வரவேற்றனர். சைப்ரஸில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.
1962 முதல் இந்தியா சைப்ரஸ் நாடுகள் இடையிலான தூதரக உறவு சிறப்பாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சர்வதேச அரங்கில் காஷ்மீர் விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்களில் நம் நிலைப்பாட்டை சைப்ரஸ் அரசு ஆதரித்து வந்துள்ளது. ஐநாவில் இந்தியா முன்வைக்கும் முக்கிய பிரச்னைகள், முன்மொழியும் கருத்துக்களுக்கு சைப்ரஸ் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. சைப்ரஸ் நாட்டில் மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இந்தியர்கள் வசிக்கின்றனர் என்றாலும், அந்நாட்டின் கல்வி, சுகாதாரம், தொழில்துறை வளர்ச்சியில், இந்தியர்களின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.
இதையும் படிங்க: இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!
மோடியின் சைப்ரஸ் பயணத்தின் போது இரு நாடுகள் இடையே, தொழில், வர்த்தகம், முதலீடு, ஐடி, புதிய கண்டுபிடிப்புகள், கடல் வழி போக்குவரத்து, வர்த்தகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மனித வளம் உள்ளிட்ட பல துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை எல்லாவற்றையும் விட, மோடி சைப்ரஸ் சென்றதன் முக்கிய நோக்கமே துருக்கியை எச்சரிக்க என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையின் போது துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது. பாகிஸ்தானுக்கு ட்ரோன்களை பரிசளித்து இந்தியாவை தாக்க பணித்தது. பாகிஸ்தான் இந்தியா போருக்கு முன்பில் இருந்தே பாகிஸ்தானுக்கு துருக்கி உதவி செய்து வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு போர் உபகரணங்களை கொத்து கொத்தாக துருக்கி அனுப்பி உள்ளது. துருக்கிய விமானப்படையின் C-130 ஹெர்குலஸ், ராணுவ போக்குவரத்து விமானம் உட்பட பல போர் உபகரணங்கள் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூருக்கு நடவடிக்கைக்குப் பிறகு மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக சைப்ரஸைத் தேர்ந்தெடுத்திருப்பது, அதன் அண்டை நாடான துருக்கிக்கு ஒரு செய்தியை உணர்த்துவதாக உள்ளது. சைப்ரஸ், துருக்கியுடன் பிராந்திய எல்லைப் பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளது. 1974 இல் துருக்கி சைப்ரஸை ஆக்கிரமித்து அதன் வடக்கு பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்தது குறிப்பிடத்தக்கது.
துருக்கி ஒரு பக்கம் இந்தியாவை எதிர்க்கும் நிலையில், காஷ்மீர், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் போன்ற இந்தியாவின் நிலைப்பாட்டை சைப்ரஸ் தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இதன் மூலம் துருக்கிக்கு செக் வைக்க முடியும் அதேபோல் சைப்ரஸ் நெருக்கமானால் ஐரோப்பாவிற்கும் நெருக்கமாக முடியும். எனவே துருக்கியை துண்டாட மோடி போட்ட ஸ்கெட்ச் தான் இந்த சைப்ரஸ் பயணம் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!