முதலாம் இராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சார் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு, மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலின் கட்டுமானத் தொடக்கத்தை நினைவுகூரும் வகையில், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவுடன் ஜூலை 23 முதல் இன்று வரை ஆடி திருவாதிரை விழா ஐந்து நாள் கொண்டாட்டமாக நடைபெறுகிறது. இதன் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
பின்னர் பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்கிறார். வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி கொண்டு வரும் கங்கை நீரைப் பயன்படுத்தி பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. கோயிலில் சில நிமிடங்கள் தியானம் செய்யவும், கோயில் சிற்பங்களையும், இந்தியத் தொல்லியல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிடுகிறார். விழாவின் முக்கிய நிகழ்வாக, பிரதமர் மோடி இராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இது சோழப் பேரரசின் பங்களிப்பைப் பறைசாற்றுவதற்கு முக்கியமான மைல்கல்.

இதனிடையே, தஞ்சாவூரில் உள்ள தென் மண்டல கலாச்சார மையத்தின் ஆதரவுடன், தேவாரம் திருமுறை பயிற்சி பெற்ற மாணவர்களால் பாடப்படுகிறது. கலாஷேத்ரா கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், பாரம்பரிய ஓதுவார்களின் தேவாரப் பாடல்களும் இடம்பெறுகின்றன.
இதையும் படிங்க: பிரதமர் மேல நம்பிக்கை இருக்கு! விரைவில் நல்ல முடிவு வரும்... முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
பத்மபூஷன் இளையராஜா மற்றும் அவரது குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது, இது விழாவிற்கு மேலும் பொலிவு சேர்க்கிறது. பிரதமரின் வருகையை முன்னிட்டு, திருச்சி விமான நிலையம் முதல் கங்கைகொண்ட சோழபுரம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
திருச்சியில் நட்சத்திர விடுதியில் இருந்து பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டார். காரில் விமான நிலையத்துக்கு சென்ற பிரதமர் மோடி விடுதியில் இருந்து ரோடு ஷோவாக மக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார். அப்போது சாலையில் பா.ஜ.க.வினர்., அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: நெருக்கடிகள் வேண்டாம்... நிதியை கொடுங்கள்! முதல்வரின் கோரிக்கை மனுவை பிரதமரிடம் வழங்கிய அமைச்சர்