தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான ஆறு உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைய உள்ளது. மாநிலங்களவையில் உள்ள பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவின் என்.சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் நிறைவு பெற்றது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 13 வேட்பாளர்கள் வேட்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜூன் 19ல் மாநிலங்களவைத் தேர்தல்.. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு..!

திமுக சார்பில் மூன்று வேட்பாளர்களும், மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் ஒரு வேட்பாளரும், அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இது தவிர சுயேட்சை வேட்பாளர்கள் ஏழு பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இதில் ஆறு பேர் போட்டி இன்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: ஜூன் 19ல் ராஜ்யசபா தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!