பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சமீப நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தூய்மை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சலுகைகள் தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டன. இருப்பினும் பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தூய்மை பணிகளை தனியாரிடம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் கலைஞர் கருணாநிதி நினைவிடம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் முன்பு அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அண்ணா அறிவாலயம் வந்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இதையும் படிங்க: திருட்டு ஓட்டு வாங்குனீங்களே... வாழ்வதா? சாவதா?... கலைஞர் நினைவிடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்...!
தூய்மை பணியாளர்கள் டயருக்கு அடியில் படுத்துக்கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடினர். அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்று போராட்டத்தில் ஈடுபட்ட தூய பணியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தின் அருகே போராடிய தூய்மை பணியாளர்கள் 349 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பணி நிரந்தரம் மற்றும் தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பஸ்ல இருந்து குதிச்சிடுவோம்… குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள்… பரபரப்பு…!