சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களின் தலைமை அலுவலகங்கள், வீடுகள் மற்றும் லாரி செட் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் 3-வது நாளாக அதிரடி சோதனை. விடிய விடிய நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல்.
சிவகாசியில் பிரபல பட்டாசு தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகங்கள், பட்டாசு தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசியிலிருந்து வருடம் தோறும் சுமார் 6 -ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான பட்டாசுகள் லாரி செட் நிறுவனங்கள் மூலமாக நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனையாகிறது. இதில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு வரி எய்ப்பு தொடர்கதையாக நடப்பதாக வருமான வரித்துறை மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்தது.
அதனடிப்படையில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நூற்றுக்கணக்கான வருமான வரித்துறை உயரதிகாரிகளும், அலுவலர்களும் சிவகாசியில் முகாமிட்டு 2-வது தினமாக இரவு முழுவதும், 3-வது நாளாக பகல் முழுவதும் அலுவலகங்களின் பல்வேறு பகுதிகள், வீடுகளின் தோட்டங்கள், நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மோசடி புகார்... மதுரை மேயர் கணவரை சென்னையில் வைத்து தூக்கிய போலீஸ் - பின்னணி என்ன?
பட்டாசுத் தொழிற்சாலையின் தலைமை அலுவலகங்களில் மட்டும் பகல் வேளை மற்றும் இரவு முழுவதும் விடிய விடிய சோதனை நடத்தப் பட்டு வரப்படும் பட்சத்தில், 3-வது நாளாக இன்றும் வருமான வரி துறையினரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் வரி ஏய்ப்பு சம்பந்தமான ஆவணங்களுடன், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கட்டுக் கட்டாக சிக்கி வருவதால் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது .
இதையும் படிங்க: தலைக்குப்புற கவிழ்ந்த ஈச்சர் வேன்; இபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுச் சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்...!