இந்தியாவில் முதன்முறையாக உச்ச நீதிமன்றம் ஒரு கருணைக்கொலை வழக்கில் நேரடியாக அனுமதி வழங்கியுள்ளது. இது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஹரிஷ் ரானாவுக்கான வழக்கு. இதில் உச்ச நீதிமன்றம் இந்த மைல்கல் தீர்ப்பை வழங்கியது. இது இந்திய சட்ட வரலாற்றில் மிக முக்கியமான தருணமாகக் கருதப்படுகிறது. ஹரிஷ் ரானா 2013ஆம் ஆண்டு சண்டிகரில் தனது விடுதியின் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்தார்.
இதனால் அவருக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. அன்றிலிருந்து கடந்த 13 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். அவரது உடல் செயல்பாடுகள் முற்றிலும் இயற்கையாக இல்லாமல், செயற்கை ஊட்டச்சத்து குழாய்கள் சுவாச உதவி போன்றவற்றால் மட்டுமே பராமரிக்கப்பட்டு வந்தது. மருத்துவ ரீதியாக அவருக்கு மீட்பு வாய்ப்பு இல்லை என பல மருத்துவ குழுக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஹரிஷின் பெற்றோர் மன உளைச்சலுக்கும், பொருளாதார சுமைக்கும் ஆளாகி, தங்கள் மகனுக்கு இனி துன்பம் தர விரும்பவில்லை என முடிவு செய்தனர். அவர்கள் மகனின் கண்ணியமான மரண உரிமைக்கு அனுமதி கோரி முதலில் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினர். 2024 ஜூலை மாதம் அது மறுக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றபோது, 2024 ஆகஸ்ட் மாதம் அதுவும் நிராகரிக்கப்பட்டது. இம்முறை அவர்கள் செயற்கை ஊட்டச்சத்து மற்றும் நீரேற்ற குழாய்களை "life-sustaining treatment" என வகைப்படுத்தி, அதை நிறுத்த அனுமதி கோரினர்.
இதையும் படிங்க: ஆர்ம்ஸ்ட்ராங் கொலை... ஜாமின் ரத்துக்கு எதிர்ப்பு..!! சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல்..!!
நீதிமன்றம் நொய்டா மாவட்ட மருத்துவமனையில் முதன்மை மருத்துவ குழு (Primary Medical Board) அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. பின்னர் AIIMS போன்ற மருத்துவமனையில் இரண்டாம் குழு அமைக்கப்பட்டு, ஹரிஷின் நிலை மீட்க முடியாதது, எதிர்காலத்தில் முன்னேற்றம் இல்லை என உறுதி செய்தது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, முதன்முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கியது.
இதையும் படிங்க: டிஜிபி நியமன விவகாரம்… ஒரு வாரம் தான் டைம்…! தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு..!