தென்காசி அருகே இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஆறு பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற தனியார் பேருந்தும், கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த இன்னொரு தனியார் பேருந்தும் இடைகால் அருகே உள்ள துரைச்சாமிபுரம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர்.
இரு தனியார் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அப்பகுதி மக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டதோடு, காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
படுகாயம் அடைந்த 40க்கும் மேற்பட்டோரில் 5 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
படுகாயம் அடைந்த பலர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். காலை நேரம் என்பதால் இரண்டு பேருந்துகளிலும் கூட்ட நெரிசல் அதிகமிருந்ததால் பலியானார் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: பாக்., சீனா வயிற்றில் புளியை கரைக்கும் இந்தியா! களமிறங்கும் அசூரன்! 2 இன்ஜின்!! மணிக்கு 2,500 கி.மீ வேகம்!!