திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை மற்றும் சுதந்திர தினம், ஆடிக்கிருத்துகை மற்றும் ஞாயிறு என தொடர் விடுமுறையின் காரணமாக பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதனால் திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களால் காணப்படுகிறது. இலவச தரிசனத்தில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பி ஆழ்வார் தோட்ட பூங்கா, நாராயணகிரி பூங்கா வரிசைகள் அனைத்தும் நிரம்பி ஆக்டோபஸ் கமாண்டோ அலுவலகம் வரை சுமார் மூன்று கிலோ மீட்டருக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள வரிசையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதனால் இலவச தரிசனத்தில் 48 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சர்வ தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு 8 மணி நேரமும் , ₹ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு 6 மணி நேரமும் காத்திருக்க வேண்டி உள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் போதிய அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிழல் பந்தல்கள் மற்றும் மாட வீதிகள், மடங்களில் தங்கி உள்ளனர்.
வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கும் திருமலையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அன்னப்பிரசாத சிறப்பு கவுண்டர்களிலும் தொடர்ந்து பக்தர்களுக்கு பால், அன்ன பிரசாதம், குடிநீர் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுமுறை தினமான
சுதந்திர தினத்தில் காலை முதல் இரவு வரை 77 ஆயிரத்து 43 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ₹ 3.53 கோடி காணிக்கையாக செலுத்தினர். வேண்டுதலின்படி 41, 859 பக்தத்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
இதையும் படிங்க: திருப்பதி செல்வோர் கவனத்திற்கு... தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு...!
இதையும் படிங்க: திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... 28 இணையதளங்கள் முடக்கம்... தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!