தமிழகத்தில் உருவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் தரப்பில், சிபிஐ விசாரணைக்கு தமிழக அலுவலகத்தில் ஆஜராக அனுமதி கோரியுள்ள சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது கரூர் கூட்ட நெரிசல் வழக்குடன் தொடர்புடையது. 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் தமிழக போலீஸ் சிறப்பு விசாரணை குழு (SIT) விசாரணை நடத்தியது.

பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ இதுவரை விஜயை உட்பட கட்சியின் பல முக்கிய நிர்வாகிகளை விசாரித்து வருகிறது. விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி - தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!
தற்போது, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணிகள் மிகவும் தீவிரமாக உள்ளதால் வேட்பாளர் நேர்காணல்கள், கட்சி கூட்டங்கள், பிரசார அட்டவணைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்கால விசாரணைகள் அனைத்தையும் சென்னை அல்லது தமிழ்நாட்டில் உள்ள வேறு ஏதேனும் சிபிஐ அலுவலகத்தில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜய்!": கரூர் வழக்கின் 3-வது கட்ட விசாரணை டெல்லியில் இன்று தொடக்கம்!