தமிழக அரசியலில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. காவிரி நீர் உரிமைப் பிரச்சினையை முன்னிறுத்தி தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த நிகழ்வில் அவர் முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகத்தை விமர்சித்து, காவிரி நீர் வராத நிலையை சுட்டிக்காட்டிப் பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் ஒரு பிரபல நடிகையின் பெயரைச் சொல்லி முழக்கமிட்டனர்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் கிண்டலான தொனியில் சில வார்த்தைகளைப் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்தக் கருத்து இரட்டைப் பொருள் கொண்டதாகவும், பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் பரவியது. வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து இது மாநில அளவிலான சர்ச்சையாக மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் கவனத்தை ஈர்த்தது.

இந்தச் சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது அதிகாரப்பூர்வ கருத்தில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் குறிப்பிட்டு, இரட்டைப் பொருள் தரும் வகையில் எள்ளி நகையாடும் பாணியில் பேசியிருப்பதாகக் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முக்கியமான பொறுப்பில் இருப்பவர் இத்தகைய எள்ளல் நடையில் பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் புரிந்துகொள்ளக்கூடிய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமற்றது என்றும், நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "பொதுமக்களை தாக்கும் திமுகவினர்"..! சட்டம் கடமையைச் செய்யும்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!
சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கு ஏற்பப் பேசும் உந்துதலால் உணர்ச்சிவசப்பட்டு தன்னிலை மறந்த அணுகுமுறையை உதயநிதி கைவிட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என்று அவர் தெளிவுபடுத்தினார். அதே நேரத்தில், சட்டமன்றம் கூடும் சூழலில் எதிர்க்கட்சித் தலைவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பதே ஆளுங்கட்சியின் நன்மதிப்பை உயர்த்தும் என்று திருமாவளவன் குறிப்பிட்டார். காவிரி நீர் உரிமைக்காக அனைத்துக் கட்சியினரும் பொதுமக்களும் இணைந்து குரல் கொடுப்பதற்கும், மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: உதயநிதி விவகாரம்..! ரெண்டுமே தப்புதான்... எடப்பாடி பழனிச்சாமி காட்டம்..!!