2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களை இருக்கிறது. இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வருகின்றனர். தங்களுடைய வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் மக்களிடம் நம்பிக்கையை விதைத்தும் வருகின்றனர்.
பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்வேட்பாளராகப் போட்டியிடும் ஆற்றலரசு என்று அழைக்கப்படும் பெ. சக்திவேல், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்த ஒரு தலைவராக உருவெடுத்துள்ளார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பெரியகுளம் (தனித் தொகுதி) தொகுதியில் களமிறங்கிய அவர், பாரம்பரிய அரசியல் பிரச்சார முறைகளுக்கு அப்பாற்பட்டு, எளிமை மற்றும் மக்கள் தொடர்பை வலியுறுத்தும் வகையில் தனது வாக்கு சேகரிப்பை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்த சம்பவம் அவரது பிரச்சாரத்தை மேற்கொண்டது கவனத்தை ஈர்த்தது.
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்தி விஜய் முதலமைச்சர் ஆகிடுவாரா..? பெரம்பூர் வெற்றியே கேள்விகுறி தான்..! திருமா. விமர்சனம்..!
விசிகவின் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் அவர், கட்சியின் தென் மண்டல வேர்களை வலுப்படுத்தும் வகையில் பெரியகுளம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது தோற்றம் மதுரையைச் சார்ந்ததாகக் கொண்டு, தென் தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் முயற்சியில் இந்தத் தொகுதியை முக்கியமாகக் கருதியது. மக்களின் பிரச்சினைகள், விவசாயிகளின் கோரிக்கைகள், சமூக நீதி போன்றவற்றை முன்னிறுத்தி அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். வீடு வீடாகச் சென்று பேசுவது போன்ற முறைகளைப் பின்பற்றினாலும், அவர் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் இணைந்து செல்லும் வகையில் செயல்படுகிறார்.
இதையும் படிங்க: நெருங்கியாச்சு எலெக்சன்..!! விசிக தேர்தல் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியீடு..!!