வெள்ளியங்கிரி மலை, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றாகும். இது ஏழு மலைகளைக் கொண்ட தொடர் என அழைக்கப்படுகிறது. உச்சியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் சிவபெருமானின் சுயம்பு லிங்கத்தைத் தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் கால் நடையாக ஏறி வருகின்றனர். இந்த மலை ஏறுதல் சுமார் 6 முதல் 9 கிலோமீட்டர் தொலைவு கொண்டது.
உயரம் சுமார் 1,850 மீட்டர் வரை உள்ளது. செங்குத்தான பாதைகள், படிக்கட்டுகள், கரடுமுரடான பாறைகள் ஆகியவை இதை மிகவும் கடினமான யாத்திரையாக ஆக்குகின்றன.மகா சிவராத்திரி முதல் சித்ரா பௌர்ணமி வரையிலான காலகட்டத்தில் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். இந்தக் காலத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் மலையேறுகின்றனர். ஆனால், இந்த ஏற்றத்தில் பலருக்கு மூச்சுத்திணறல், திடீர் உடல் நலக்குறைவு, இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

குறிப்பாக 2024, 2025, 2026 ஆண்டுகளில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன.பக்தர்கள் மலை ஏறத் தொடங்கியவுடன், முதல் அல்லது இரண்டாவது மலையிலேயே சிலருக்கு மூச்சு வாங்குவது கடினமாகிறது. செங்குத்தான ஏறுதல், உயரம் காரணமாக ஆக்ஸிஜன் அளவு குறைவது, உடல் பயிற்சி இல்லாதவர்கள் திடீரென முயற்சிப்பது, வயது முதிர்ந்தோர், இதய நோய் உள்ளவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள் ஆகியோருக்கு இது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் மயக்கம், மாரடைப்பு போன்றவை ஏற்பட்டு சிகிச்சைக்கு முன்பே உயிர் பிரிகிறது.
இதையும் படிங்க: #BREAKING: பேரதிர்ச்சி… தகைசால் தமிழர் நல்லகண்ணு காலமானார்..!!
சிலர் ஏறும்போதும், சிலர் கோயில் தரிசனத்துக்குப் பிறகு இறங்கும்போதும் இறக்கின்றனர்.உதாரணமாக, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பிப்ரவரி மாதத்தில் திருச்சியைச் சேர்ந்த தேசிங்குராஜன் என்ற 60 வயது பக்தர் ஐந்தாவது மலையில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். இந்த நிலையில் மற்றொரு பக்தர் முதல் மலையிலேயே மயங்கி இறந்தார். 48 வயதான ஹரிதாஸ் என்ற பக்தர் முதல் மலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல், கடந்த ஆண்டுகளில் ஒரே வாரத்தில் 2-3 பேர் வரை உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இதையும் படிங்க: இனிமே இப்படிதான்..! FIR டவுன்லோட் செய்யக் கட்டுப்பாடு... காவல்துறை எடுத்த அதிரடி முடிவு..!!