சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகளை நடும் இலக்கோடு 'வீ த லீடர்ஸ்' (We The Leaders) அறக்கட்டளை சார்பில் மாபெரும் பசுமை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது; இதில் முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நமது 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், தமிழ்நாட்டின் வனப்பரப்பை உயர்த்தவும் சுற்றுச்சூழல் மாற்றத்தை எதிர்கொள்ளவும் மாநிலம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகளை நடும் மாபெரும் பசுமை இயக்கம் முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகளை நட தீவிர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பசுமைத் தொலைநோக்குப் பார்வையையும், 'சின்னக் கலைவாணர்' விவேக் அவர்களின் ஈடு இணையற்ற இயற்கைச் சேவையையும் நெஞ்சில் ஏந்தி இப் பசுமைப் பயணத்தை நாம் மக்கள் இயக்கமாக முன்னெடுக்கிறோம்.
இதையும் படிங்க: வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் WE THE LEADERS அமைப்பு..! 80 மரக்கன்றுகளை நடும் அண்ணாமலை..!
இயற்கையைப் பாதுகாக்கும் இப் புனிதப் பணியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களும் தன்னார்வலர்களும் திரளாகக் கைகோர்க்க வேண்டும். ஒவ்வொரு தன்னார்வலரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு, அதனைத் தொடர்ந்து பராமரித்து வளர்க்க முன்வர வேண்டும். 'மரம் நடுவோம்! இயற்கையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு அனைவரும் இப் பசுமை இயக்கத்தில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன், என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 50 ஆயிரம் நீர்நிலைகள் காணாமல் போச்சு..! தண்ணீருக்கே தவிக்கும் நிலை வரும்..! அண்ணாமலை எச்சரிக்கை..!!