போதை பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட விவாகரத்தை தொடர்ந்து கழுகுப்பட நடிகர் கிருஷ்ணாவையும் விசாரிக்க போலீசார் திட்டமிட்ட நிலையில் அவர் தலைமறைவனதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்குல நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கழுகுப்பட நடிகரான கிருஷ்ணாவும் தொடர்பு இருக்கிறது என்று தெரியவந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து கேரள பகுதியில் படப்பிடிப்பில் உள்ள கிருஷ்ணாவை சென்னை அழைத்து வந்து விசாரிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் இருக்கக்கூடிய கிருஷ்ணாவினுடைய குடும்பத்தினரை போலீசார் அணுகி விசாரித்ததாகவும், அப்பொழுது அவர் கேரளாவில் இருப்பது தெரிய வந்து அவருடைய குடும்பத்தினர் மூலமாக தொடர்பு கொண்டு விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

முதலில் விசாரணைக்கு வருவதாக சொன்ன கிருஷ்ணா, தற்போது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவரிடம் விசாரிப்பதற்கு முறைப்படி சம்மன் அவருடைய முகவரிக்கு கொடுக்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறுகின்றனர். ஆனால் இதுவரை அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் மேலும் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டதால் அவர் தலைமறைவாகி இருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில கூறுகிறார்கள். தொடர்ந்து அடுத்த கட்ட ஆலோசனைகள் குறித்து காவல் துறையினர் வந்து விசாரித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: என்ன வார்த்தை சொல்லிட்டாருய்யா..!! 'தக் லைஃப்' படத்திற்காக மணிரத்னம் சொன்ன அந்த சொல்..!

கிருஷ்ணாவுக்கு கொடுத்த சம்மனிற்கு அவருடைய வழக்கறிஞர்கள் வந்து ஆஜராகி விளக்கம் விளக்கம் அளிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குப் பிறகே வந்து மீண்டும் கிருஷ்ணாவிற்கு சம்மன் அனுப்புவதா அல்லது அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து அவரை விசாரணைக்கு பிடித்து அழைத்து வருவதா என ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நடிகர் ஸ்ரீகாந்த் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். அவர் போதை பொருள் பயன்படுத்தியதை அவர் வாக்குமூலத்தில ஒப்புக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட அதிமுக உடைய முன்னாள் நிர்வாகி ஐடி டிவி நிர்வாகி பிரசாத் மூலமாக இந்த போதைப்பொருள் இவர்களுக்கு ஸ்ரீகாந்திற்கும் நடிகர் கிருஷ்ணாவிற்கும் வந்து கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சில சினிமா துறையை சேர்ந்த சிலர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியிலும், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரசாத்தினுடைய கூட்டாளி பிரதீப் போதை பொருளை கொண்டு சென்று கொடுத்ததாகவும் கூறுகிறார்கள்.

இந்த இரண்டு பேர் மட்டும் தான் திரைத்துறையில் போதைப்பொருள் பயன்படுத்தினார்களா? அல்லது மேலும் சிலர் இருக்கிறார்களா? என்பது குறித்தெல்லாம் ஸ்ரீகாந்திடமும் விசாரணை நடத்துவதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளார்கள்.
இதையும் படிங்க: போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல்..!