பொதுவாக திரை பிரபலங்களின் வாரிசுகள் திரையுலகிலேயே நடிகர்களாகவோ அல்லது தயாரிப்பாளர்களாகவோ அல்லது இயக்குனர்களாகவோ உருவெடுத்து வருவது காலம் காலமாக நடக்கக்கூடிய ஒன்றே.
கார்த்திக், சூர்யா, என பெரிய பிரபலங்களில் இருந்து சிறிய பிரபலங்களான அதர்வா, அதிதி என தற்போது திரையுலகில் வாரிசுகளின் பங்கு சற்று அதிகமாகவே நிறைந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் தான் நடிகர் ஷாருக்கானின் மகன் தற்போது பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இது மட்டும் இன்றி அதே படத்தில் அவரது மகளும் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

ஆரியன் காணின் The Ba***ds of Bollywood என்ற இணைய தொடரை அவரது தந்தையான ஷாருக்கான் தயாரிக்கிறார். மேலும் இது netflix ott தளத்தில் இந்த தொடர் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிகழ்ச்சி ஒன்று நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஷாருக்கான் குடும்பத்துடன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஷாருக்கான், "ஆறு அத்தியாயங்கள் கொண்ட ஒரு தொடரை ஆரியன் இயக்கி வருகிறார்.
இதையும் படிங்க: ரஜினி பட தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை; அதிர்ச்சியில் திரையுலகம்!
அதில் பாலிவுட் திரையுலகில் நுழைய விரும்பும் ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் அதில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து விவரிக்கும் வகையில் இந்த தொடர் தயாராகி வருகிறது. மேலும் இதில் என் மகன் மற்றும் மகள் திரையுலகத்திற்கு அறிமுகமாவாதல் இந்தத் தொடர் என் மனதிற்கு நெருக்கமான ஒன்றாகவும் உள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் அந்த தொடரின் சில பகுதிகளை பார்த்த போது அது நகைச்சுவையாக இருந்தது. அது உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். அதனால் இந்த தொடருக்கு ரசிகர்கள் உங்கள் ஆதரவை தர வேண்டும். இந்நேரத்தில் என் மகன் மற்றும் மகளுக்கு நான் அளிக்கும் அட்வைஸ் இதுதான். இயக்குனர் மற்றும் கதாநாயகியாக திரையுலகில் உங்களது பயணத்தை தொடங்கும் நீங்கள் எனக்கு அளித்த அன்பில் 50 சதவீதத்தை பெற்றால் அதுவே எனக்கு போதும் என உருக்கமாக பேசினார்.

தொடர்ந்து இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில், தற்போது ஷாருக்கானின் இந்த அட்வைஸ் வலைதளவாசிகள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது. முன்னதாக இதே ஆரியன் கான்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்.4 ஆம் தேதி சொகுசு கப்பலில் போதை பொருள் விநியோகம் மற்றும் பயன்படுத்திய குற்றத்திற்காக போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது மனம் திருந்தி மறு வாழ்வாக அவரது இயக்கத்தில் தொடர் ஒன்று வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இத்தனை கோடி சம்பளமா..? எஸ்.எஸ்.ராஜமவுலியால் ப்ரியங்கா சோப்ராவுக்கு ரூ.10 கோடி நஷ்டம்..!