தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா, பூவெல்லாம் கேட்டுப்பார், சில்லுனு ஒரு காதல், காக்க காக்க, மாயாவி ஆகிய படங்களில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்துள்ளார். படங்களில் பணியாற்றி வரும் பொழுது இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு, பின்னர் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்று மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். தியா மற்றும் தேவ் இருவரின் பள்ளி படிப்பிற்காக சூர்யாவும், ஜோதிகாவும் சென்னையிலிருந்து மும்பைக்கு குடி பெயர்ந்தனர்.

திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு டாடா சொன்ன நடிகை ஜோதிகா, தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்து அசத்தலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா ஜோதிகாவின் மூத்த மகள் தியா தனது பள்ளி படிப்பை முடித்து விட்டார். அதற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்ற நிலையில், கையில் சான்றிதழ்களுடன் சூர்யா, ஜோதிகா, சிவகுமார் என ஒட்டுமொத்த குடும்பமும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். அதனை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: யாரு.. ரேவதியா..? புகழ் மூதாட்டி பெருமாயி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!
PROUD OF YOU MY GIRL என்று தனது ஆசை மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை ஜோதிகா

தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் கியூட் புகைப்படம்

தனது தாத்தா, பாட்டிகளுடன் பேத்தி தியா இருக்கும் அழகான புகைப்படம்

PROUD GRANDPARENTS என்று தனது தாத்தா, பாட்டிகளுடன் இருக்கும் தியாவின் சிறுவயது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ஜோதிகா


பள்ளி ஆசிரியர்களுடன் தியா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்


LKG முதல் 12ம் வகுப்பு வரை மகள் தியாவிற்கு சத்தான உணவை சமைத்து கொடுத்த தேவி என்ற பெண்ணுக்கு நன்றி தெரிவித்து, அவருடன் தியா இருக்கும் புகைப்படத்தை நடிகை ஜோதிகா பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: 'செல்தட்டி' குடும்பத்தின் 'சொல்தட்டிகள்...!' ஜோ- சூர்யாவின் ஆணிவேரை அறுத்த வாய்க்கொழுப்பு..!