மதுரையில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பவன் கல்யான் கலந்து கொண்டார். நடிகராக இருந்த இவர், ஜனசேனா கட்சியைத் தொடங்கி பின் ஆந்திராவின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற நாள் முதல் இவர் தனது பேச்சால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். சமீபத்தில் கூட திருப்பரங்குன்றம் மலையில் காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா குறித்து எழுந்த சர்ச்சையில் முரணான கருத்து கூறியது பேசுபொருளானது.

இந்த நிலையில் தற்போது மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதற்கு ப்ளூ சட்டை மாறன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் பேசுகையில், நான் 14வது வயதில் சபரிமலைக்குப் போனவன். தை பூசத்திற்கு திருத்தணிக்கு போகிறவர்களை பார்த்தவன். சென்னை மயிலாப்பூரில் படுத்தபோது நெற்றியில் பட்டையுடன் பள்ளிக்கு போனவன். அடுத்த 10 ஆண்டுகளில் நெற்றியில் விபூதி பூசுவதை கேள்வி கேட்டார்கள். இந்த கேள்விகளை நான் எனது 14 வது வயதிலேயே எதிர் கொண்டவன். இதை பெரிது படுத்த வேண்டாம்.
இதையும் படிங்க: என்ன விஜய்.. உங்க பேச்சுல பாஜக சாயல் தெரியுதே.. நீட்-க்கு ஆதரவா பேசுறீங்க..! சாட்டையை சுழற்றிய ப்ளூ சட்டை மாறன்..!

காரணம் இந்துக்கள் மதச் சார்பற்றவர்கள். ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்தவராக இருக்கலாம், ஒரு இஸ்லாமியர் இஸ்லாமியராக இருக்கலாம், ஆனால் ஒரு இந்து இந்துவாக இருந்தாலே இவர்களுக்கு பிரச்னை. ஒரு இந்து இந்துவாக இருந்துவிட்டால் அவன் மதவாதி என்பதுதான் இவர்களின் போலி மதச்சார்பின்மை. முருகனைப் பற்றி கேள்வி கேட்கும் உங்களால் அரேபியாவில் இருந்து வந்த மதங்கள் குறித்து கேள்வி கேட்க முடியுமா?

அதற்கான துணிச்சல் உங்களுக்கு உண்டா? அதனால் சொல்கிறேன் சீண்டி பார்க்காதீர்கள் என்று ஆவேசமாக பேசினார். அவரது இந்த பேச்சுக்கு ப்ளூ சட்டை மாறன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், உங்க டீயை உங்க மாநிலத்துலயும், வட நாட்டுலயும் போய் ஆத்துங்க தம்பி. அடிக்கடி இங்க வந்து மதவாத பஞ்ச் பேசாதீங்க. சுடு தண்ணிய புடிச்சி மூஞ்சில ஊத்துற டீ மாஸ்டர்கள் இங்க ஏராளம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோலிவுட்டில் தீவிரமாக நடந்த கொகைகன் சப்ளை... ஸ்ரீகாந்திற்கு அடுத்ததாக மாட்டப்போகும் முக்கிய நடிகர்...!