தனது வாழ்க்கையில் சிறந்த ஆசிரியராக ஆரம்பித்து பின்பு நடிகர் ஆக மாறி சிறந்த படைப்பாளியாக ஒன்பது புத்தகங்களை எழுதி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவரிடம் பேசுபவர்கள் சற்று ஆறுதல் பெரும்படியாக பேசும் குணமுடைய ராஜேஷ், ஜோதிடம் சம்பந்தமான பல விஷயங்களை தொலைக்காட்சிகளில் பேசி அனைவரது மனதையும் ஆறுதல் படுத்துபவர். 75 வயதான ராஜேஷ், சீரியல் மற்றும் சினிமாவில் 49 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து தனக்கான ஒரு இடத்தை பெற்று இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தி இருக்கிறார்.

கடந்த 2000 மாவது ஆண்டில் 'அழுக்கு வேட்டி' என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தார் ராஜேஷ், அதனைத் தொடர்ந்து 'சவுக்கடி' என்ற சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். பின்பு 2001ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அலைகள்' என்ற சீரியலில் 'கிருஷ்ணா' என்ற கேரக்டரில் பலரது மனதையும் கொள்ளை கொண்டு சென்றார். இதனை அடுத்து கணவருக்காக, சுவாமி ஐயப்பன், ஆண்பாவம், தாயம், முடிவில்லா ஆரம்பம், களத்து வீடு, ரோஜா, சூரியவம்சம், டைகர் மாணிக்கம், ஜில்லுனு ஒரு காதல், கனா காணும் காலங்கள், கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து இருக்கிறார் நடிகர் ராஜேஷ். மேலும், 1987 முதல் 1991 வரை அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் நடிகர் ராஜேஷ்.
இதையும் படிங்க: நடிகர் ராஜேஷ் மரணம்.. தனது நண்பருக்காக ரஜினிகாந்த் உருக்கம்..!

அடுத்ததாக அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் தலைவராகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பில் வகித்தவர். மேலும், தனது தந்தை, தாய், மனைவி கல்லறை இருக்கும் இடத்தில் தனக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் கல்லறை கட்டிவிட்டார். அதை ஒரு பேட்டியில் விரிவாக சொல்லியிருக்கிறார். அந்த கல்லறையில் எழுதப்பட வேண்டிய வாசகத்தை கூட முன்பே முடிவு செய்துவிட்டார். இப்படி பட்ட நடிகர் ராஜேஷ் நேற்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இப்படிப்பட்ட நல்ல மனிதர், எந்த வித தீய பழக்கமும் இல்லாத மனிதனுக்கு ஏற்கனேவே ஹார்ட் ஆபரேஷன் செய்து இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் ராஜேஷ், சமீபத்தில் துபாய் சென்று இருக்கிறார். அங்கு உணவு, தண்ணீர் என எதுவுமே அவருக்கு செட் ஆகவில்லை. அதனால் மிகவும் முடியாமல் தான் இந்தியா வந்திருக்கிறார். மேலும் அலைச்சல் காரணாமாகவும் பல டென்ஷன் காரணமாகவே திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், அடுத்தவாரம் அவர் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. அதற்காகவும் பல அலைச்சல்களில் இருந்துள்ளார். ஆனால் தனது மகனின் திருமணத்தை பார்க்காமலே உலகத்தை விட்டு மறைந்து போய்விட்டார்.

இதனை அடுத்து, மறைந்த நடிகர் ராஜேஷின் மகள் அவரது இறுதி சடங்கிற்காக கனடாவில் இருந்து வந்து கொண்டிருக்கிறார். மேலும் அவரின் இறுதிச்சடங்கானது சனிக்கிழமை மாலை 3 மணியளவில் கீழ்ப்பாக்கத்தில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கமல் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? நடிகர் சிவராஜ்குமார் ஆவேசப் பேச்சு..!