இயக்குநர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் ரஜினியின் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்து ஷங்கரின் முழுவித்தையையும் கற்று கொண்ட அட்லீ தயாரித்த, ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், போன்ற படங்கள் அனைத்தும் ஹிட் படம் தான். இதனை தொடர்ந்து, இவர் இயக்கிய 'ஜவான்' திரைப்படம் ஓடாது என்று விமர்சனம் செய்தவர்கள் வாய்பிளக்கும் அளவிற்கு ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் திக்குமுக்காட வைத்தது.

இந்த நிலையில், தற்போது, இயக்குனர் அட்லீயின் 6வது படமும் அல்லு அர்ஜுனின் 22வது படமுமான இப்படத்தை பிரபல சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்துள்ளது. இப்படத்தின் தயாரிப்புக்கு மட்டுமே சுமார் 600 கோடி ரூபாய் தேவைப்படும் என்பதால் அந்த தொகையை வாரி கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் லண்டனில் LOLA VFXல் நடைபெற்று வருகிறது. அங்குள்ள முக்கிய நபர்கள் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்துவிட்டு மிரண்டுபோயுள்ளனர் என்ற தகவலும் கிடைத்து இருந்தது.
இதையும் படிங்க: ஒரே ஸ்டன்ட்டில் ஓஹோன்னு வந்த டாம் குரூஸ்..! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்...!

LOLA VFX அவெஞ்சர்ஸ், டெர்மினேட்டர், அவதார் போன்ற மாபெரும் படங்களுக்கு பணிபுரிந்துள்ளனர். LOLA VFXல் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் தங்களது படத்திற்காக முன் தயாரிப்பு பணிகள் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகளையும் இந்த அறிவிப்பு வீடியோவில் காட்சிகளாக காண்பிக்க, தற்பொழுது மக்கள் இந்த படத்தை காண ஆவலுடன் காத்து கொண்டு இருகின்றனர். இந்தநிலையில், இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அந்த வகையில் இப்படத்தில் நடிக்க முதலில் கமிட்டாகி இருந்த நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் திடீரென நடிக்க மாட்டேன் என சொன்னதால் யாரை அடுத்த ஹீரோயினாக சேர்ப்பது என தெரியாமல் அட்லீ புலம்பி கொண்டு இருக்க சமீபத்தில் அதற்கான மூன்று ஹீரோயின்களும் கிடைத்ததற்கான அதிகார பூர்வ தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி, ஜான்வி கபூர் மற்றும் மிருணாள் தாகூர் ஆகிய இருவரும் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்க தற்பொழுது மூன்றாவது ஹீரோயினாக அனன்யா பாண்டே களமிறங்கி இருக்கிறார் என்ற இனிப்பான தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், தற்பொழுது இப்படத்தில் அடுத்த ஹீரோயின் ஒருவர் களமிறங்கி இருக்கிறார். அதன்படி, இப்போது அனைவரது கனவு கன்னியான தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக சக் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளதுஇந்த படத்திற்காக தீபிகாவை சந்தித்து அட்லி கதை சொல்லி இருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ, அதன்பின் டெஸ்ட் ஷீட்டிற்காக எடுக்கப்பட்ட வீடியோ ஆகிய இரண்டும் அந்த அறிவிப்பு வீடியோவில் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவில் தீபிகாவின் காஸ்டியூமை பார்க்கும் பொழுது கண்டிப்பாக இந்த படத்தில் அவர் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அட்லீயின் படம் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்து கிடக்கின்றனர்.
இதையும் படிங்க: மாமன் படத்தில் ஐஸ்வர்யா செய்த சேட்டை..! மனம் திறந்த நடிகர் சூரி..!