• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    என்ன.. CM விஜய் குறித்து இப்படி சொல்லிட்டாங்க..!! மனம் திறந்த நடிகை ரோஜா.. விழுதுகளின் ரியாக்ஷன் என்னவா இருக்கும்..!

    நடிகை ரோஜா முதலமைச்சர் விஜய் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
    Author By Bala Wed, 15 Jul 2026 13:26:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actress-roja-spoke-about-vijays-political-future-tamilcinema

    தமிழ் சினிமாவில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகளில் முக்கியமானவர் ரோஜா. ரஜினிகாந்த், சரத்குமார், அர்ஜுன், கார்த்திக், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்த அவர், தனது நடிப்பு, நடனத் திறன் மற்றும் திரை வசீகரத்தால் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். பின்னர் திரைப்படங்களை விட அரசியலில் முழு கவனம் செலுத்திய ரோஜா, ஆந்திரப் பிரதேச அரசியலில் முக்கிய பெண் தலைவராக உயர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சராகவும் பணியாற்றினார்.

    நீண்டகாலமாக அரசியல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த ரோஜா, தற்போது மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்பியிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துவரும் ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் முழுநீள கதாபாத்திரத்தில் ரோஜா நடித்துள்ளார். இந்தப் படம் மூலம் அவர் மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்திக்கவிருப்பது, அவரது திரைப்பயணத்தில் முக்கியமான அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது சினிமா ரீ-என்ட்ரி, அரசியல் அனுபவங்கள், சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது குறித்த தனது பார்வை மற்றும் நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து ரோஜா வெளிப்படையாக பேசியுள்ளார். சினிமாவிற்கு மீண்டும் திரும்பியிருப்பது குறித்து பேசிய அவர், “நான் என்றுமே சினிமாவை விட்டு விலகிவிட்டேன் என்று நினைத்ததில்லை. அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தியதால் படங்களில் நடிக்க முடியவில்லை.

    இதையும் படிங்க: என்னுடைய மிகப்பெரிய பலமே ரசிகர்கள்தான்..!! அவர்களை மகிழ்விப்பதே என் லட்சியம்.. மனம் திறந்த நடிகை திவ்யபாரதி..!

    actress-roja-spoke-about-vijay

    ஆனால் இப்போது மீண்டும் நடிக்க வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசியலில் தினமும் பல அழுத்தங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த அழுத்தங்களிலிருந்து எனக்கு புத்துணர்ச்சி தருவது சினிமாதான்,” என்று கூறினார். மேலும், இந்த முறை வெறும் ஒரு படம் மட்டுமல்லாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “இந்த முறை மிகவும் அழுத்தமாக திரும்பி வந்திருக்கிறேன். அடுத்த மூன்று ஆண்டுகள் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன்,” என்று ரோஜா கூறியுள்ளார்.

    அரசியலில் தனது அனுபவங்களைப் பற்றி பேசிய ரோஜா, சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வரும்போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து தனது கருத்தையும் பகிர்ந்துகொண்டார். “சினிமா பிரபலங்கள் மீது அரசியல்வாதிகளுக்கு எப்போதுமே ஒரு விதமான பொறாமை இருக்கும். தேர்தல் பிரசாரத்திற்கு வரும்போது அன்பாக அழைப்பார்கள். ஆனால் அதே சினிமா பிரபலங்கள் நேரடியாக அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டால், அவர்களை எதிர்த்து ஒன்றுசேர்ந்து செயல்படுவார்கள். அந்த மாதிரியான போட்டிகளையும், பொறாமைகளையும், பல சதிகளையும் நான் என் அரசியல் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

    அதேபோல் நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்தும் ரோஜா தனது கருத்தை பகிர்ந்துள்ளார். “தமிழகத்திலேயே விஜய்க்கு என்னென்ன நடந்தது என்பதை எல்லோரும் பார்த்திருக்கிறார்கள். அவர் அரசியலில் இறங்கிய பிறகு, இது சரியில்லை, அது சரியில்லை என்று பலரும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். இது அரசியலில் புதிதல்ல. பொதுவாழ்க்கைக்கு வரும் அனைவரும் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என்று அவர் கூறினார்.

    actress-roja-spoke-about-vijay

    இதனைத் தொடர்ந்து, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றிகரமாக செயல்பட்ட தலைவர்களை நினைவுகூர்ந்த ரோஜா, “எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ், ஜெயலலிதா போன்றவர்கள் எல்லோரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்தான். ஆனால் அவர்கள் மக்களுக்காக உழைத்து, சொன்னதை செய்து காட்டியதால் மக்களின் நம்பிக்கையை பெற்றார்கள். அதுபோல அரசியலில் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றி, மக்களுக்காக உண்மையாக உழைத்தால் விஜய்க்கும் நல்ல எதிர்காலம் இருக்கும்,” என்று தனது கருத்தை தெரிவித்தார்.

    மேலும், அரசியலில் புதிய தலைமுறையினரின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். “இளைஞர்கள் அரசியலுக்கு அதிகமாக வர வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்திற்கும் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். புதிய சிந்தனைகளும், புதிய அணுகுமுறைகளும் அரசியலுக்கு தேவை,” என்று ரோஜா கூறினார்.

    ரோஜாவின் இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, சினிமா மற்றும் அரசியல் ஆகிய இரு துறைகளிலும் தனது அனுபவங்களை இணைத்து அவர் பகிர்ந்த கருத்துகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. ஒருபுறம் சினிமாவில் மீண்டும் முழு நேர கவனம் செலுத்தத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்திருப்பதும், மறுபுறம் அரசியல் குறித்து வெளிப்படையாக பேசியிருப்பதும் இந்தப் பேட்டியை பேசுபொருளாக மாற்றியுள்ளது.

    actress-roja-spoke-about-vijay

    திரைப்பட நடிகையாகத் தொடங்கி, அரசியல்வாதியாக உயர்ந்து, தற்போது மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பியிருக்கும் ரோஜாவின் புதிய இன்னிங்ஸ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், சினிமா மற்றும் அரசியல் இரண்டையும் பற்றிய அவரது அனுபவப் பகிர்வுகளும், நடிகர் விஜயின் அரசியல் எதிர்காலம் குறித்து அவர் தெரிவித்த கருத்துகளும் தற்போது திரையுலகிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. வரும் காலங்களில் ரோஜா நடிக்கும் புதிய திரைப்படங்களும், அவரது அரசியல் பயணமும் எந்த திசையில் நகர்கிறது என்பதை ரசிகர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: என் வாழ்க்கை முழுக்க மேடு.. பள்ளங்கள்தான்..!!.. விபத்துக்கு பிறகு வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடம்.. மனம் திறந்த யாஷிகா ஆனந்த்..!

    மேலும் படிங்க
    தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை 822 பேர் கைது: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடி உத்தரவு!

    தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை 822 பேர் கைது: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    கண்ணீர் மல்க முறையிட்ட சபரிவர்மன் குடும்பத்தினர்! நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!

    கண்ணீர் மல்க முறையிட்ட சபரிவர்மன் குடும்பத்தினர்! நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!

    தமிழ்நாடு
    ரூ.10,000 கோடி முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டம்! கேரளாவில் தடம் பதிக்கும் டாடா குழுமம்!

    ரூ.10,000 கோடி முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டம்! கேரளாவில் தடம் பதிக்கும் டாடா குழுமம்!

    இந்தியா
    போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

    போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

    தமிழ்நாடு
    ரூ.14.79 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி திறப்பு!

    ரூ.14.79 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி திறப்பு!

    தமிழ்நாடு
    பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்..! சார்பதிவாளர் கைதுக்கு இடைக்காலத்தடை..! மதுரை கிளை ஆணை..!!

    பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்..! சார்பதிவாளர் கைதுக்கு இடைக்காலத்தடை..! மதுரை கிளை ஆணை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை 822 பேர் கைது: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடி உத்தரவு!

    தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை 822 பேர் கைது: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    கண்ணீர் மல்க முறையிட்ட சபரிவர்மன் குடும்பத்தினர்! நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!

    கண்ணீர் மல்க முறையிட்ட சபரிவர்மன் குடும்பத்தினர்! நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!

    தமிழ்நாடு
    ரூ.10,000 கோடி முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டம்! கேரளாவில் தடம் பதிக்கும் டாடா குழுமம்!

    ரூ.10,000 கோடி முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டம்! கேரளாவில் தடம் பதிக்கும் டாடா குழுமம்!

    இந்தியா
    போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

    போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

    தமிழ்நாடு
    ரூ.14.79 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி திறப்பு!

    ரூ.14.79 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி திறப்பு!

    தமிழ்நாடு
    பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்..! சார்பதிவாளர் கைதுக்கு இடைக்காலத்தடை..! மதுரை கிளை ஆணை..!!

    பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்..! சார்பதிவாளர் கைதுக்கு இடைக்காலத்தடை..! மதுரை கிளை ஆணை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share