தேவயானி நடிப்பில் வந்த அனைத்து படங்களும் இன்றும் பார்க்க கூடிய அழகிய படங்களாகவே இருக்கும். அதிலும் தேவயானி நடிப்பில் வந்த சூர்யவம்சம் படத்தில் ஒரே பாடலில் கலைக்டர் ஆகி, பலரது மனதிலும் ஊக்கம் கொடுத்தவர். எப்பொழுதும் இவரை படத்தில், சேலையில் அல்லது சுடிதாரில் தான் பார்க்க முடியும். தமிழ் திரையுலகில் கவர்ச்சி காட்டாமல் நடித்த நடிகை என்ற பெருமைக்கு சொந்தகாரர் தான் தேவயானி. இவர் படத்தில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் ஃபேமஸ் தான்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "கோலங்கள்" சீரியலில் நடித்து தனக்கான பெண்கள் ரசிகை பட்டாளங்களை உருவாக்கியவர். இப்படி அழகாக தமிழ் பேசும் தேவயானி, மும்பையில் பிறந்து வளர்ந்தவர். அதன்பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழி படங்களில் 90 மற்றும் 2000 காலகட்டத்தில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வந்தார். அதன் பிறகு, இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை காதலித்து திருமணம் செய்தது கொண்டார். தேவையானி மற்றும் ராஜ்குமாரன் தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு அழகான பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இதையும் படிங்க: விஜய் பற்றியும் என்னை பற்றியும் உனக்கு என்ன தெரியும்..! ஆவேசப்பட்ட நடிகை த்ரிஷா..!

இப்படி திரையுலகில் இன்றும் கலக்கி வரும் தேவயானி, காதல் கோட்டை, கல்லூரி வாசல், விவசாயி மகன், சூர்யவம்சம், நினைத்தேன் வந்தாய், நீ வருவாய் என, பாட்டாளி, தெனாலி, வல்லரசு, பாரதி, அப்பு, பிரெண்ட்ஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், அழகி, பஞ்சதந்திரம், நியூ, கிரி, ஐந்தாம் படை, ஸ்ட்ராபெரி, களவாணி மாப்பிளை, எழுமின், ஜீனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இப்படி இருக்க, அவரது மூத்த மகளான இனியா, தற்பொழுது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாட்டு போட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது அழகிய குரலால் அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.

மேலும், அவரது தாயான நடிகை தேவயானி, எனது மகளுக்கு சினிமாவில் பாடுவதற்கு என்னால் ஈசியாக சான்ஸ் வாங்கி கொடுக்க முடியும். ஆனால் அது எனக்கு தேவையில்லை. பிள்ளைகள் வாழ்க்கையை போட்டி போட்டு கற்று கொள்ள விரும்புகிறேன். அவளது திறமையை மற்றவர்களுடன் போட்டி போட்டால் தான் அவளால் புரிந்து கொள்ள முடியும். குறைகளை நிறைவாக்கவும் முடியும் என்பதை நம்புகிறேன். ஆதலால் இந்த நிகழ்ச்சியை எனது மகளுக்கு போட்டி காலமாக இருப்பதால் அதில் இறக்கி விட்டு இருக்கிறேன் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். இதனை பார்த்த பலரும் தேவயானியை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்பொழுது, நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ள "மிஸ்டர் அண்ட் மிஸஸ்" படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வனிதா விஜயகுமாரே இயக்கியும் நடித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில், இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் பேசிய நடிகை வனிதா, " இதுவரை நானும் நடிகை தேவயானியும் நல்ல தோழிகளாகத்தான் இருக்கிறோம். தேவயானியின் மகளான இனியாவுடன் என் மகளை கம்பேர் செய்து பேசுவது மிகவும் தவறு. உண்மையில், நம்முடைய குழந்தைகளாக இருந்தாலும் ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையோடு கம்பேர் பண்ண பேச கூடாது அது தவறு.

அப்படி இருக்கும்போது, ஒரு நடிகையின் மகளோடு என்னுடைய மகளை கம்பேர் செய்வது மிகவும் வருத்தமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் இந்த நடிகரா...! வியப்பில் ரசிகர்கள்...!