கிரிக்கெட் பார்க்காத ரசிகர்களை இன்று பார்க்கவே முடியாது. முன்பெல்லாம் நாடுகளை வைத்து விளையாடப்பட்டு வந்த கிரிக்கெட் தற்பொழுது மாநிலங்களாக பிரிக்கப்பட்டு விளையாடப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் ஆர்.சி.பி ஜெயித்த பின் ஸ்சாலா கப் நாமதே என ஒரு நாடே கொண்டாடுகிறது என்றால் கிரிக்கெட் மீது அதீத பைத்தியமாக இருக்கின்றனர் ரசிகர்கள்.

அந்த வகையில் கிரிக்கெட்டால் இன்று அனைவரது புகழையும் சம்பாதித்து இருப்பவர் தான் கேப்டன் சவுரவ் சண்டிதாஸ் கங்குலி. ஜூலை 08, 1972ம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்த இவர் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். ஆதலால் தான் அவர் இந்தியாவின் வெற்றிகரமான "டெஸ்ட் கேப்டன்" என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். 1996வது ஆண்டிற்கு பிறகு அனைவரது ஆட்ட நாயகனான சச்சின் டெண்டுல்கருடன் சேர்ந்து விளையாடி வரலாற்றில் தனக்கான இடத்தை பிடித்தார் கங்குலி.
இதையும் படிங்க: அப்படி என்ன போதை கேக்குது உடம்புக்கு..! விஜய் ஆண்டனி ஆவேசம்..!

2000 மாவது ஆண்டில் கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸ் செய்வதில் ஏற்பட்ட ஊழல்கள் அம்பலமானதை அடுத்து கங்குலி கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார், பின்னர் அவரது கடுமையான திறமையாலும் டீமை வழி நடத்திய விதத்தாலும் கங்குலி தலைமையிலான இந்தியா அணி டெஸ்ட் போட்டிகளில் வெளிநாடுகளுக்கு சென்று வெற்றி கோப்பையை பெறத் தொடங்கியது. இதனை தொடர்ந்து 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது டீமை இறுதிப் போட்டி வரை அழகாக வழிநடத்தி அழைத்துச் சென்றார். பின்பு அதே ஆண்டில் வெறி கொண்ட வேங்கையாக களமிறங்கிய அவர் ஆஸ்திரேலியா மற்றும் பிரிஸ்பேனில் அனைவரும் எதிர்பாராத வகையில் சதம் அடித்து இந்தியாவின் பெயரை உலகம் முழுவதும் உச்சரிக்க செய்தார். பின்பு பாகிஸ்தான் அணியையும் விளையாட்டில் திணறடித்தார்.

அதேபோல், 2006-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் கங்குலி 30 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டத்தை இழந்தார். இதனால் பலரது கேலிகிண்டலுக்கு ஆளானார். பின் 2006-2007 ஆம் ஆண்டில் வெளிநாட்டுத் தொடருக்கான டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. அந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்து தன்னை மீண்டும் அனைவருக்கும் நிரூபித்தார். இப்படியாக தனது கிரிக்கெட் வாழ்வில் பலரையும் திணறடித்தவர் தான் சவுரவ் சண்டிதாஸ் கங்குலி. இப்படி இருக்க, தோணி மற்றும் சச்சினுக்கு பையோபிக் படங்கள் எடுத்ததை போல் இவரது வாழ்க்கையையும் தற்பொழுது படமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, தற்பொழுது தனியார் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த நடிகர் ராஜ்குமார் ராவ் பேசுகையில், " நான் தற்பொழுது கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் மட்டுமல்லாமல் பெரிய பொறுப்பு என்றே சொல்வேன். அதனால் தான் எனக்கு மிகவும் பதட்டமாக இருக்கிறது" என தெரிவித்து இருக்கிறார். மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே, நடிகர் ராஜ்குமார் என்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பார் என கேப்டன் கங்குலி கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோலிவுட்டில் கொக்கைன் மாஃபியா.. நடிகர் கிருஷ்ணா விவகாரத்தில் திடீர் திருப்பம்...!