தமிழ் திரையுலகில் தற்போது நம்பிக்கை நட்சத்திர நாயகனாக உருவெடுத்து இருப்பவர் தான் கிட்ஸ்களை தன் வசம் வைத்து இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். தனது திறமையால் பல மேடைகளை கண்டு தனது நடிப்பின் உச்சத்தை வெளிக்காட்டி ரசிகர்களின் அன்பை பெற்று இன்று பெருசுகளுக்கு மட்டுமல்ல சிறுசுகளுக்கும் நம்பிக்கை நாயகனாகவும் நட்சத்திர நடிப்பு வள்ளலாகவும் இருப்பவர் தான் நம் சிவகார்த்திகேயன்.

தனது ஆரம்ப வாழ்க்கையை பிரபல தொலைக்காட்சியில் தொடங்கிய இவர், பல ஏற்றத்தாழ்வுகளை தனது வாழ்க்கையில் கண்டு வந்தவர் என்றால் அது மிகையாகாது. இரவு பகல் என்று பாராமல் இவர் உழைத்த உழைப்பு இன்று அவரை உயர்ந்த இடத்தில் கொண்டு போய்வைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அன்று உலக நாயகனுக்கும், ரஜினிக்கும், தலைக்கும், தளபதிக்கும் விசில் அடித்து தங்களது கரகோஷங்களை கொடுத்த ரசிகர்கள், தற்பொழுது இவருக்கும் தங்களது கரகோஷங்களை கொடுப்பதை பார்த்து பலரது உள்ளங்களும் நெகிழ்ந்து இருக்கிறது என்றால் அதுதான் சிவகார்த்திகேயனின் அயராத உழைப்பு.
இதையும் படிங்க: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. 7 வருஷம்.. கொடுத்த வாக்கை காப்பாற்றும் 'SK'.. மனதார பாராட்டிய இயக்குநர்..!

ஆரம்பத்தில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக உள்ளே வந்த சிவகார்த்திகேயன், பல போட்டிகளில் வெற்றி அடைந்து அடுத்ததாக டான்ஸ் நிகழ்ச்சியிலும் தனது திறமையை காண்பித்தார். அதன் பின்பு இவருக்கு தொகுப்பாளராக வாய்ப்பு கிடைக்க முதலில் பேசவராமல் தடுமாறிப்போன அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் மணமுடைந்து போன சிவகார்த்திகேயன் நாம் எங்கு தவறு செய்தோம் எதனால் நமக்கு இப்படி ஒரு பயம் வருகிறது என யோசித்து தனது பயங்களை வாழ்க்கையின் அடுத்த கட்ட ஏணிப்படிகளாக நினைத்து முன்னேற ஆரம்பித்தார். தொகுப்பாளராக தனது வாழ்க்கையை மீண்டும் தொலைக்காட்சியில் தொடங்கிய அவர் தனது எண்ணற்ற கவுண்டர்களால் மக்களின் மனதை சிதறடித்தார்.

சாதாரணமாக சீரியல்களில் உள்ளம் கொள்ளை போகுதடா என்ற பெயரை கேட்கும் பொழுது நமக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்கிறதோ அதே போல் தொலைக்காட்சியை ஆன் செய்தால் அங்கு சிவகார்த்திகேயன் இருப்பதை பார்த்தவுடன் பலரது உள்ளங்களும் கொள்ளை போனது என்பது உண்மையே. இப்படிப்பட்ட சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தனது காலடித்தடத்தை பதிக்கும் பொழுது 'மெரினா' என்ற திரைப்படத்தில் நடிகை ஓவியாவுடன் நடித்திருந்தார். பெரிதளவில் அத்திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் அடுத்தடுத்த படங்களும் அவருக்கு சற்று தோல்வியை கொடுத்தது. ஆனால் அவை எதையும் பொருட்படுத்தாத சிவகார்த்திக்கேயன், தனது அயராத உழைப்பை வெள்ளித்திரையில் தொடர்ந்து கொடுத்துக் கொண்டு வந்தார்.

பல அடிகள், அவமானங்கள், வேதனைகள், கண்ணீர்கள், கவலைகள் என சினிமா துறையில் அவர் படாத பாடுகளே இல்லை. ஆனாலும் சோதனைகளை சகித்தால் தான் சாதனையாளராக மாற முடியும் என்ற தாரக மந்திரத்தை புரிந்து கொண்ட சிவகார்த்திக்கேயன் தனது அயராத உழைப்பை மீண்டும் மீண்டும் கொடுத்து தற்பொழுது மிகப் பெரிய ஸ்டார் ஆக மாறி இருக்கிறார். தற்பொழுது ரசிகர்கள் சிவகார்த்திகேயனுடைய திரைப்படம் எப்பொழுது திரையில் வரும் என்று கண்ணோக்கி பார்த்து ஏங்கும் அளவிற்கு அவர் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் இன்றும் மக்கள் மனதில் பேசக்கூடிய திரைப்படமாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தற்பொழுது அவர் பராசக்தி மற்றும் மதராஸி ஆகிய இரண்டு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த படம் வெளியாவதற்காக ரசிகர்களும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இப்படிப்பட்டதான இந்த வேளையில் சமீபத்தில் பாலிவுட் நடிகரான அமீர்கானின் "சித்தாரே ஜமீன் பர்" படம் தற்பொழுது ரூ.100 கோடி வசூலைக் கடந்து ரசிகர்களின் அன்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்க 2018-ம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான "சாம்பியன்" திரைப்படத்தின் ரீமேக்காக இத்-திரைப்படம் பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் அமீர்கான் தான் கோலிவுட் நடிகரான சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டதாக பகிரங்கமாக தெரிவித்து இருக்கிறார்.

அதன் படி அவர் பேசுகையில், " நான் பல படங்களை நடித்து இருந்தாலும் 'லால் சிங் சத்தா ' என்ற படம் எனக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. இதனால் நான் மிகவும் உடைந்து போய் இருந்தேன். சிறிது நாட்களுக்கு நடிப்பதிலிருந்து நாம் பிரேக் எடுத்துக் கொள்ளலாம் என ஆசைப்பட்டேன். என்னுடைய எண்ணத்தை எனது நண்பரான இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னாவிடம் தெரிவித்தேன். உடனே அவர் சற்றும் யோசிக்காமல் நீங்கள் திரையுத்துறையில் நடிகராக இல்லாமல் தயாரிப்பாளராக உங்களது அடுத்த பயணத்தை தொடங்கினால் என்ன? என எனக்கு சின்ன அட்வைஸ் கொடுத்தார். எனக்கு அவர் சொன்னது சரி என்று பட, அதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன். இதனை அடுத்து "சித்தாரே ஜமீன் பர்" படத்தை குறித்து ஃபர்ஹான் அக்தர் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரிடமும் சென்று இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்காக பேசி கால் சீட்டை பெற்றோம்.

இதனை அடுத்து இத்திரைப்படத்தின் விவாதத்தின் பொழுது நாம் ஏன்? இந்த திரைப்படத்தில் நடிக்க கூடாது என எனக்கு சிறிய எண்ணம் தோன்றியது. ஏனெனில் அந்த அளவிற்கு திரைப்படத்தின் கதைக்களம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் நான் இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னாவிடம் இத்திரைப்படத்தில் நானே நடிக்கிறேனே எனக் கேட்ட பொழுது அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் அதற்கு ஒப்புக்கொண்டார். பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஃபர்ஹான் அக்பரிடம் நானே திரைப்படத்தில் நடிக்க இருக்கிறேன் என்று கூறி அவர்களிடத்தில் மன்னிப்பு கேட்டேன். நான் கூறியது முதலில் அவர்களுக்கு ஷாக்காகவே இருந்தது. ஏனெனில் இத்திரைப்படத்தின் கதை அவர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் எனது சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் எனக்கு உதவி செய்தனர்" என்று ஆமிர் கான் தெரிவித்திருக்கிறார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தாலும் இத்திரைப்படம் பயங்கர ஹிட் அடித்து இருக்கும் ஆனால் அமீர்கானின் சூழ்நிலையைக் கண்டு அவர் விட்டுக் கொடுத்தது மனதிற்கு நிகழ்ச்சியை கொடுக்கிறது என பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் தோற்றத்தில் மங்காத்தா..! இயக்குனர் வெங்கட் பிரபுவின் அட்ராசிட்டி ஸ்டார்ட்..!