சமீபத்தில், நடிகர் கமல்ஹாசனுக்கு இரண்டு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதை நினைத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒன்று சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு துறையின் வியாபார அமைப்பான 'பிக்கி' அதாவது இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு குழுவின் தெற்கு மண்டல தலைவராக கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் தலைவராக பொறுப்பேற்ற பின் பேசிய நடிகர் கமல்ஹாசன், தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளடக்கம், பார்வையாளர்கள் என்ற இருபெரும் சக்திகளே பிரதானமாக இருக்கின்றன. நாம் டிஜிட்டல் யுகத்தின் முதல் கட்டத்துக்குள் நுழையும் வேளை இது. இந்தியாவின் தொழில்நுட்ப படங்களான "அனிமேஷன் மற்றும் விஷூவல் எபெக்ட்ஸ்" போன்ற படங்களின் உருவாக்கத்தில் உலகளாவிய உற்பத்தி மையமாக நம்மை நிலைநிறுத்துகிறது. அனைத்து பிராந்தியங்கள்,
இதையும் படிங்க: கமல் வச்ச குறி தப்பல.. தக் லைஃப் படத்தை தொட்ட நீ கெட்ட.. கன்னட அமைப்புகளுக்கு போலீஸ் வார்னிங்..!

மொழிகள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையில் கூட்டிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் தரும் ஒரு தொழில்துறையை உருவாக்குவதற்கு முக்கிய பங்காற்றும். இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையை 28 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்து 100 பில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்துறையாக உயர்த்துவதுடன், உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் படைப்புகளை உருவாக்க பாடுபட வேண்டும் என கமல் தெரிவித்துள்ளார்.

இரண்டாவதாக, திரைத்துறையின் உச்சபட்ச அமைப்பாக விளங்கும் ஆஸ்கர் அகாடமிக்கு புதிய உறுப்பினர்களாக இணைய உலகம் முழுவதும் உள்ள 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோரும் அடங்குவர். குறிப்பாக ஜூன் 26 ம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட இந்த பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த காஸ்டிங் டைரக்டர் கரண் மல்லி, ஒளிப்பதிவாளர் ரணபீர் தாஸ், காஸ்டியூம் டிசைனர் மாக்சிமா பாசு, ஆவணப்படத் தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் பாயல் கபாடியா உள்ளிட்டவர்களுக்கு அழைப்பது விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒருவேளை இவர்கள் அனைவரும் இதில் இணைய சம்மதித்தால் ஆஸ்கர் அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 11,120 ஆகவும், வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10,143 ஆகவும் உயரும். மேலும் இதில் நடிகர் கமல்ஹாசன் இணைய சம்மதித்தால் அகாடமியில் வாக்களிக்கும் உரிமையை பெறுவார். குறிப்பாக இந்த ஆண்டிற்கான புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் கிட்டத்தட்ட 41% பெண்களும், 45% பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களும் மற்றும் 55% அமெரிக்காவிற்கு வெளியே உள்ள 60 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

இப்படி இருக்க, ஆஸ்கர் அகாடமிக்கு புதிய உறுப்பினர்களாக இணைந்து வாக்களிக்கும் இடத்திற்கு சென்றுள்ள உலகநாயகன் கமல்ஹாசனை வெகுவாக பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார் ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண். அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியத் திரைப்படத் துறைக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் தருணம், பத்மபூஷன் கமல்ஹாசன் அவர்கள், மதிப்பு மிக்க அகாடமி விருதுகள் 2025 குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், ஆறு தசாப்தங்களாக ஒரு அற்புதமான நடிப்புத் தொழிலைக் கொண்ட உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு நடிகர் என்பதை விட ஒருபடி மேலானவர். ஒரு நடிகராக, கதை சொல்பவராக மற்றும் இயக்குனராக அவரது புத்திசாலித்தனம், அவரது பல்துறை திறமை மற்றும் பல தசாப்த கால அனுபவத்துடன் இந்திய மற்றும் உலகளாவிய சினிமாவில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், எழுத்தாளர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என திரைப்படத் தயாரிப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் அவரது விதிவிலக்கான ஆளுமை உண்மையிலேயே மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கிறது. அவர் கலைத் துறையின் மிகப்பெரிய மாஸ்டர். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவர் உலக சினிமாவிற்கு இன்னும் பல ஆண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் சேவையை வழங்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்துல டான்ஸ் ஆடுனது குத்தமா? - காது கூசும் கமெண்ட்ஸ்... ரஜினியால் கடுப்பான கமல் ஃபேன்ஸ்...!