அனைவரது கனவு நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷின் இயற்பெயர் என்ன என்று கேட்டால் "வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா" என்று கூறுவர் இவர் நடிகராக மட்டுமல்லாமல், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய தனுஷ், தற்பொழுது கோலிவுட், பாலிவுட்டை கடந்து ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.

இப்படி, இன்று உலகையே தனது திறமையால் கையுக்குள் வைத்து கலக்கி வரும் தனுஷின் ஆரம்ப வாழ்க்கையில் அவருக்கு அச்சாணியாக இருந்த முதல் படம் 2002-ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான "துள்ளுவதோ இளமை" என்ற திரைப்படம் தான். இதனை அடுத்து அவர் நடித்த படங்களை பார்த்து அவரை பலரும் அவமானப்படுத்தினர். ஆனால் தனக்கு வந்த எந்த கேலி கிண்டல்களையும் பொருட்படுத்தாமல் திருடா திருடி, திருவிளையாடல், பொல்லாதவன், படிக்காதவன், வேங்கை, வேலையில்லா பட்டதாரி, த்ரீ, மாரி, ராயன் என வரிசையாக பல படங்களில் நடித்து தனக்கென ஓர் இடத்தை திரையுலகில் பிடித்தார்.
இதையும் படிங்க: என்ன இப்படி சொல்லிட்டாரு...! தனுஷின் 'குபேரா' பட இயக்குனர் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்..!

இப்படி, பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறிய தனுஷை "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்தின் மூத்த மகளான "ஐஸ்வர்யா ரஜினிகாந்த்" காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் இருவரும் பிரிந்து உள்ளனர். மேலும் தனுஷின் பெற்றோர்கள் என ஒரு தம்பதி வந்து அவரை பாடாய்ப்படுத்தினர். இத்தனை வலிகளையும் தாங்கி கொண்ட தனுஷ் தனது கெரியரில் முழு கவனம் செலுத்தி இன்று ஹாலிவுட் வரை சென்றுள்ளார். இப்படிப்பட்ட நடிகர் தனுஷின் மீது பல சர்ச்சைகள் சுமத்தப்பட்டாலும் அதிலிருந்து ஒற்றை வார்த்தையில் வெளியே வந்து விடுவார் நடிகர் தனுஷ்.

மேலும், நடிகர் தனுஷ் இதுவரை துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி, ட்ரீம்ஸ், சுள்ளான், புதுக்கோட்டை சரவணன், தேவதையை கண்டேன், அது ஒரு கனா காலம், திருவிளையாடல் ஆரம்பம், புதுப்பேட்டை, பரட்டை என்கின்ற அழகு சுந்தரம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், குட்டி, உத்தமபுத்திரன், ஆடுகளம், சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, அம்பிகாபதி, நையாண்டி, மரியான், வேலையில்லா பட்டதாரி, அனேகன், மாரி, தங்கமகன், தொடரி, கொடி, வேலையில்லா பட்டதாரி 2, மாரி 2, வடசென்னை, அசுரன், பக்கிரி, என்னை நோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ், கலாட்டா கல்யாணம், ஜகமே தந்திரம், கர்ணன், மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி, ஆயிரத்தில் ஒருவன் 2, கேப்டன் மில்லர், ராயன், இளையராஜா, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதனை அடுத்து குபேரா, தனுஷ் 55, இட்லி கடை, D56, மாரியப்பன் உள்ளிட்ட படங்கள் இவர் நடிப்பில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில், சேகர் கமுலா இயக்கத்தில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோரின் நடிப்பில் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் 'குபேரா '. இப்படத்திற்கான இசைவெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இதில் பேசிய தனுஷ், " எனக்கு நடிகராக இருப்பதை விட இயக்குனராக இருப்பதுதான் மிகவும் பிடிக்கும். அதனாலேயே இடையில் சில படங்களை இயக்கி வருகிறேன். ஆனாலும் ரசிகர்கள் என் படங்களுக்காகக் காத்திருக்கிறார்கள், அதனால்தான் நான் நடிகராக இருக்கிறேன். இல்லையென்றால் நான் நடிப்பதை நிறுத்திவிட்டு முழுநேர இயக்குனராக மாறியிருப்பேன் " என்றார்.
இதையும் படிங்க: குபேரா படத்தின் கதை லீக் ஆனதால் டென்க்ஷனில் படக்குழு..! ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி..!