நடிகர் சிம்பு 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' என்று பெயர் பெற்றாரோ, நடிகர் விஜய் 'தளபதி' என பெயர் பெற்றாரோ, நடிகர் அஜித் 'தல' என்று பெயர் பெற்றாரோ, இவர்கள் வரிசையில் நடிகர் தனுஷ் 'இந்தியன் புரூஸ்லி' என்னும் புனைப்பெயரை கொண்டவர் தான் நடிகர் தனுஷ்.

பல திறமைகளை தனக்குள் அடக்கி வைத்திருக்கும் தனுஷ், பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கஸ்தூரிராஜா மற்றும் விஜயலட்சுமி தம்பதிக்கு மகனாக பிறந்தவர். பிறப்பால் திரையுலக குடும்பத்தை சேர்ந்த இவர் 2002-ம் ஆண்டு இவரது தந்தையின் இயக்கத்தில் வெளியான 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதில் இவரை பார்த்து பலரும் கேலி கிண்டல்கள் செய்தாலும் அதனை குறித்து துளியும் கவலை படாத தனுஷ் தனது பணியை திறம்பட செய்து வந்தார். இதனை அடுத்து பல படங்களில் நடித்த தனுஷின் மீது காதல் வைக்கப்பட்ட சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை 2004 நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக காதல் திருமணம் செய்து கொண்டார் தனுஷ். தற்பொழுது இவர்கள் இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதையும் படிங்க: குப்பை கிடங்கில் தனுஷ் ராஷ்மிகா... ஏழு மணி நேரம் என்ன செய்தார்கள் - நடிகரே கூறிய உண்மை...!

இப்படிப்பட்ட நடிகர் தனுஷின் படங்களை லிஸ்ட் போட முடியாது. அந்த அளவிற்கு பல படங்களில் நடித்துள்ளார். அந்தவகையில் இந்து வரை, இப்படிப்பட்ட நடிகர் தனுஷ் இதுவரை துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி, ட்ரீம்ஸ், சுள்ளான், புதுக்கோட்டை சரவணன், தேவதையை கண்டேன், அது ஒரு கனா காலம், திருவிளையாடல் ஆரம்பம், புதுப்பேட்டை, பரட்டை என்கின்ற அழகு சுந்தரம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், குட்டி, உத்தமபுத்திரன், ஆடுகளம், சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, அம்பிகாபதி, நையாண்டி, மரியான்,

வேலையில்லா பட்டதாரி, அனேகன், மாரி, தங்கமகன், தொடரி, கொடி, வேலையில்லா பட்டதாரி 2, மாரி 2, வடசென்னை, அசுரன், பக்கிரி, என்னை நோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ், கலாட்டா கல்யாணம், ஜகமே தந்திரம், கர்ணன், மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி, ஆயிரத்தில் ஒருவன் 2, கேப்டன் மில்லர், ராயன், இளையராஜா, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் குபேரா, தனுஷ் 55, இட்லி கடை, D56, மாரியப்பன் உள்ளிட்ட படங்கள் இவர் நடிப்பில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில், சேகர் கமுலா இயக்கத்தில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோரின் நடிப்பில் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் 'குபேரா '. இப்படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியானது சமீபத்தில் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இப்படிப்பட்ட சூழலில் இப்படத்தின் கதையானது வெளியாகியுள்ளது.

குபேரா படத்தின் கதையென பார்த்தால், " மிகப்பெரிய பணக்காரர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு தெரியாமல் ஊழல் செய்பவர்களுக்கு 'சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட்' ஆக பணிபுரியும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் நாகார்ஜுனா. இப்படி இருக்க, அனைவரது பணத்தையும் தனது கணக்கில் வைத்திருக்கும் நாகர்ஜுனா அந்த கருப்புப் பணத்தை எல்லாம் வொயிட்டாக மாற்ற பெரிய திட்டத்தையே திட்டுகிறார். இதனால் சில சாலையோர பிச்சைக்காரர்களையும் ஏழ்மையில் வாடும் தனுஷையும் தேர்ந்தெடுத்து, அவர்கள் அனைவருக்கும் போலி அடையாளங்களை உருவாக்கி அதன்முலம் அவர்களை போலி தொழிலதிபர்களாக மாற்றி, அவர்களது பெயரில் சுவிஸ் பேங்கில் கணக்குகளை திறக்க வைக்கிறார்.

இப்படி நாகார்ஜுனா செய்யும் வேலையை கற்றுக்கொண்ட தனுஷ், தனது குருவையே மிஞ்சி ஒரு வேலை பார்க்கிறார். அதில் தான் கதையே அடங்கியிருக்கிறது. குறிப்பாக நாகார்ஜுனாவுக்கே தெரியாத சிலபல விஷயங்களை திட்டமிட்டு, பணம் போட்ட பல முதலைகளை தனது லாபத்திற்காக அசால்ட்டாக கையாளுகிறார் நடிகர் தனுஷ். இதனால் நீ பெரியாளா நான் பெரியாளா என இருவருக்கும் இடையே ஒரு பெரிய போராட்டமே வெடிக்கிறது, இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் படத்தின் கதையாக உள்ளது.

இதனை அறிந்த ரசிகர்கள் தனுஷின் குபேரா படத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.
இதையும் படிங்க: "If you are bad i am your dad" வதந்தி பரப்புகிறவர்களுக்கு தனுஷ் சொன்ன தக் பதில்..!