சினிமாவில் எந்த படமாக இருந்தாலும் அதனை தன் பாணியில் எடுத்து ஹிட் கொடுப்பவர் என்ற தான் அட்லீ. இவர் இயக்கிய எந்த படமும் இதுவரை தோல்வி அடைந்தது இல்லை. இப்படிப்பட்ட அட்லீ, இயக்குநர் ஷங்கரிடம், விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் மற்றும் ரஜினியின் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்து ஷங்கரின் முழுவித்தையையும் கற்று தேர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் அட்லீ இயக்கிய முதல் படம் "முகப்புத்தகம்" இந்த குறும்படத்தில் கதாநாயகனாக சிவர்கார்த்திகேயன் நடித்து இருப்பார்.

உதவி இயக்குனராக இருந்த அட்லீ 2013ம் ஆண்டு வெள்ளித்திரையில் முதல் இயக்குனராக "ராஜா ராணி" திரைப்படத்தில் மொழிபெயர்ப்பு. இது "தி கிங் அண்ட் குயின்" படத்தின் காப்பியாக இருந்தாலும் காதல் மற்றும் நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஏஆர் முருகதாஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நஜிம் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யராஜ், சந்தானம், சத்யன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அட்லீக்கு முதல் படியாக அமைந்தது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு NO..! கமல் மன்னிப்பு கேட்காமல் படம் ஓடாது - நீதிபதி திட்டவட்டம்..!

அட்லீயின் இரண்டாவது திரைப்படம் தெறி, 2016வது வருடம் கலைப்புலி எசு.தாணுவிஜய் தயாரிப்பில், அட்லீ இயக்கியத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடிப்பில் உருவான திரைப்படம். இந்த படம் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்து அட்லீயை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது.

அட்லீயின் மூன்றாவது திரைப்படம் மெர்சல், 2017 தீபாவளி அன்று ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அட்லீயின் இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் வெறித்தனமான இசையில் விஜய், காஜல் அகர்வால், எஸ். ஜே. சூர்யா, வடிவேலு, சமந்தா, நித்யா மேனன், கோவை சரளா, ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெர்சல். இப்பத்தில் "மதராஸி நஹி மதுர வாசி" என்ற டைலாக் சொன்னதும் விஜயின் எண்ட்ரி காட்சிக்கு திரையரங்கமே அதிர்ந்தது.

அட்லீயின் நான்காவது திரைப்படம் "பிகில்", 2019 தீபாவளிக்கு முன்தினம் கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிபில், அட்லீ இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இசையில், விஜய், நயன்தாரா, விவேக், ஜாக்கி செராப், கதிர், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரூ.300 கோடி வசூலை அள்ளி தந்தது.

இதனை தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து படம் எடுப்பார் அட்லீ என அனைவரும் கூறிக்கொண்டு இருக்கையில் தனது குருவான ஷங்கர் செய்த ஒரு காரியத்தை அட்லீ செய்தார், அதுதான் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தது. பாலிவுட்டில் எடுத்தவுடனே ஷாருக்கானை வைத்து "ஜவான்" படத்தை எடுத்தார். படம் ஓடாது என்று விமர்சனம் செய்தவர்கள் வாய்பிளக்கும் அளவிற்கு படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் திக்குமுக்காட வைத்தது.

இப்படி பல படங்களை எடுத்த அட்லீ, தற்பொழுது புஷ்பா படத்தின் கதாநாயகனாக அல்லு அர்ஜுனை வைத்து ரூ.600 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமான படத்தை இயக்கி வருகிறார். தற்பொழுது அந்த படத்தில் நடிகை தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இப்படிபட்ட சூழலில், சென்னையில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் கடந்த 18 ஆண்டுகளாகவே அறிவியல், கலை, இலக்கியம், தொழில்நுட்பம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் சாதனையாளர்களை தேர்வு செய்து பட்டம் வழங்கி வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அந்த வகையில் சினிமா துறையில் தோல்வியே அடையாமல் ஆறு படங்களை எடுத்து சாதனை படைத்ததற்காக அட்லீக்கு பட்டம் வழங்கப்பட்டது.

பட்டத்தை பெற்ற அட்லீ பேசுகையில், " நான் பல படங்களில் இருந்து நிறைய காட்சிகளை காஃபி அடிக்கிறேன் என சொல்லுகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. இதுவரை நான் எந்த படத்தையும் காஃபி அடித்ததில்லை. என் வாழ்வில் நடந்தவைகளையே எடுப்பேன். உங்கள் அனைவர்க்கும் பிகில் படம் தெரியும். அந்த படம் ஜேப்பியாரை வைத்து உருவாக்கிய படம். ஏனெனில் அவர் எனக்கு படிப்பு ரீதியாக உதவி செய்திருக்கிறார். என்னை முதன் முதலில் போய் இயக்குநராகிட்டு வா என சொன்னவரும் அவர் தான். அவர் வாக்கு இன்று பலித்துள்ளது. மேலும், நான் இயக்குனராகும்வரை என் அப்பா அம்மா தான் என்னை பார்த்து கொண்டார்கள்.

என்னை ஆளாக்கியது என் மனைவி, என்னை நல்ல மனுஷனாக்கியது எனது மகன் என்றார். மேலும் எனக்கு பொய் சொல்ல வராது, பொய் சொன்னால் உடனே எனக்கு இருமல் வந்து விடும் என சொல்லி கொண்டே, நான் கல்லூரியில் நன்றாக படித்தேன், நான் கோல்டு மெடலிஸ்ட் என இருமிய படியே சொல்ல, அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.
இதையும் படிங்க: குஜராத் துயரச் சம்பவம்: மனம் நொந்து போன பிரியங்கா சோப்ரா.. வேதனையில் போட்ட பதிவு..!