ஒரே ஒரு இசை வெளியீட்டு விழாவை வைத்து அதில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரை சிறப்பு விருந்தினராக அழைத்து, "உயிரின் உறவே தமிழே...! எனது வாழ்க்கையும் குடும்பமும் அனைத்தும் தமிழ் மொழி மட்டும்தான். எனது குடும்பம் அனைத்தும் இங்குதான் இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமாரும் இங்கு வந்துள்ளார். அவரது மொழி கன்னடம், ஆனால் தமிழ் மொழியிலிருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமானவர்" என சொல்லி இன்று இணையதளத்தை தொட்டாலே கரண்ட் ஷாக் அடிப்பதை போல் அவருடைய செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

கன்னட மொழியை கமலஹாசன் அவமதித்துவிட்டார் எனவும் இவர் என்ன தமிழ் வல்லுனரா எனவும் பலரும் கேள்விகளை கேட்டு தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் கர்நாடகர்கள். அது மட்டுமல்லாமல் சில அரசியல் கட்சிகளும் இதில் தலையிட்டு நடிகர் கமலஹாசன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடித்து வருகின்றனர். அதையும் மீறி அவர் மன்னிப்பு கேட்காமல் படத்தை வெளியிட்டால் தியேட்டர்களை அடித்து உடைப்போம் கொளுத்துவோம் எனவும் எச்சரித்து வருகின்றனர்.
இதனால் கமலஹாசனின் கன்னட ரசிகர்களும் பெரிதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க இத்திரைப்படத்தை கர்நாடக்காவில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வெளியிடவும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடியது நடிகர் கமலஹாசனின் தரப்பு.
இதையும் படிங்க: அடி மேல அடி விழுந்துட்டே இருக்கே.. நாவலில் இருந்து எடுக்கப்பட்ட தக் லைப் படம்...! டென்ஷனில் மணிரத்தினம்...!

இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகள், கமலஹாசன் என்ன மொழி வல்லுனரா என கேள்வி கேட்டதுடன் உங்கள் படத்துக்கு பாதுகாப்பு தருவதெல்லாம் இரண்டாவது விஷயம், மொழியைப் பற்றி பேசி மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறீர்கள் ஆதலால் முதலில் நீங்கள் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என காலக்கெடு கொடுத்து உத்தரவிட்டனர்.
இதனை அடுத்து, அறிக்கை ஒன்றை வெளியிட்ட நடிகர் கமலஹாசன், " நான் கன்னட மொழி மட்டுமல்ல அனைத்து மொழிகளையும் மதிக்க கூடியவன். ஆதலால் தான் மொழியின் அடிப்படையில் சிவராஜ்குமார் எனது குடும்பம் என தெரிவித்து இருந்தேன். நான் கூறிய தகவல் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என தெரிவித்து இருந்தார்.

இதனைப் பார்த்த நீதிபதி நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள விஷயங்கள் எல்லாம் சரிதான். ஆனால் இதில் மன்னிப்பு என்ற வார்த்தைகளே இல்லையே என கூறினார். அதற்கு நடிகர் கமலஹாசனின் தரப்பில் இருந்து தவறாக பேசியிருந்தால் தானே மன்னிப்பு கேட்க வேண்டும் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதற்கு எதற்காக மன்னிப்பு என கேட்டனர். இதனை அடுத்து பேசிய நீதிபதி, ஒரு மன்னிப்பு தானே அதைக் கேட்பதில் அப்படி என்ன உங்களுக்கு ஈகோ என காட்டமாக பேசியிருந்தார்.

இப்படி இருக்க, இந்த வழக்கானது ஜூன் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் அன்று வழக்கு விசாரணை நடைபெறாத நிலையில் நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, நடிகர் கமல்ஹாசன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லையா? என்று கேட்டார். அதற்கு கர்நாடக வழக்கறிஞர், இன்னும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்று பதிலளித்தார். இதனை அடுத்து இந்த வழக்கை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி அதுவரை படம் வெளியிட தடை விதித்துள்ளார்.

இப்படிப்பட்ட சூழலில், மகேஸ்ரெட்டி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கர்நாடகத்தில் 'தக் லைப்' படத்திற்கு கன்னட சினிமா வர்த்தக சபை தடை விதித்து நீதித்துறையின் அதிகாரத்தை மீறி வருவதாகவும் ஆதலால் இதனை உடனே பரிசீலனை செய்து கர்நாடகத்தில் தக் லைஃப் படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். இதனை விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த்குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் கர்நாடக அரசு, கன்னட சினிமா வர்த்தக சபைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் விரைவில் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விண்வெளி நாயகனின் பட வசூல் வான்வழி அளவுக்கு கூட நெருங்கவில்லையா.. தியேட்டரில் இருந்து ஓடிடிக்கு மாறும் 'தக்லைப்'..!