மனிதனுக்கு தேவையான மூன்று காரியங்கள் என்னவென்றால், உண்ண உணவு.... உடுக்க உடை... தங்க இருப்பிடம்... இவை மூன்றும் இருப்பவர்கள் இந்த உலகத்தில் மிகவும் புண்ணியம் செய்தவர்கள் என்று கூறுவர். அதுமட்டுமல்லாமல் இவை மூன்றும் இருப்பவர்கள் நிம்மதியாக உறங்கவும் செய்வார்கள்.

இல்லையெனில் எப்பொழுது நாம் வீடு வாங்குவோம், நமக்கு வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்ற எண்ணத்தில் தூக்கத்தை தொலைத்து மனவேதனையுடன் சுற்றித் திரிபவர்கள் இங்கு அநேகர் இருக்கின்றனர்.அந்த வகையில் சமீபகாலமாக கோலிவுட்... பாலிவுட்.. சினிமாக்களில் அதிரடி ஆக்சன் காட்சிகளும், கேங்ஸ்டர் பற்றிய கதைகளும் பெருகி இருப்பதால், ஃபேமிலி ஆடியன்ஸ்கள் பலர் திரையரங்குகளுக்கு வந்து திரைப்படத்தை பார்ப்பதையே முழுவதுமாக விட்டு இருக்கின்றனர். அதற்கு உதாரணமாக கே.ஜி.எப் திரைப்படம் முதல் சலார், விக்ரம், ரெட்ரோ என பல படங்கள் வந்தாலும் அதில் காண்பிக்கின்ற ஆக்ஷன் காட்சிகளை பார்க்க ஆர்வம் குறைந்து போனதால் குடும்ப ஆடியன்ஸ்கள் அனைவரும், 'அண்ணாத்த திரைப்படத்தைக் கூட பார்ப்போம்
இதையும் படிங்க: அடுத்த தளபதி நானாக இருக்கனும்.. ஆசிர்வாதம் பண்ணுங்க..! நடிகர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற சூர்யா சேதுபதி..!

ஆனால் நீங்கள் எடுக்கும் கேங்ஸ்டர்ஸ் படத்தை பார்க்க மாட்டோம்' என பிடிவாதம் பிடித்து வருக்கின்றனர். ஆளாகப்பட்ட ஹாலிவுட் சினிமாவிலேயே ஆக்சன் காட்சிகள் அனைத்தையும் குறைத்து விட்டு தற்பொழுது குடும்பம் தான் முக்கியம் என்றும் குடும்பத்துக்காக தந்தையான நான் எது வேண்டுமானாலும் செய்வேன் என்று சொல்லத் தக்கதான பல சினிமாக்கள் அங்கேயே உருவாகி இருக்கின்ற வேலையில், நமது கலாச்சாரமாக பார்த்து வந்த குடும்பத் திரைப்படங்கள் எதனால் மாறியது என்று தெரியவில்லை என பலரும் குழம்பி தவிக்கின்றனர்.

இப்படிப்பட்டதான சூழலில் சமீபகாலமாக குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன், மெட்ராஸ் மேட்னி என பல சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகி ரூ.100 கோடியை கடந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. அதேசமயம் ரூ.300 கோடி ரூ.400 கோடி செலவு செய்து பிரமாண்டமான ஆக்ஷன் திரைப்படங்களை எடுத்த மணிரத்தினத்தின் தக் லைஃப்.. கார்த்திக் சுப்புராஜின் ரெட்ரோ.. முதலானவை தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.

இதிலிருந்து தற்பொழுது சினிமா துறையினர் கற்றுக் கொண்ட பாடம் என பார்த்தால் மக்களுக்கு ஆக்ஷனை விட ரியாக்ஷன் நிறைந்த செண்டிமெண்ட் படங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அதுவும் அவர்கள் வாழ்க்கையில் ஒத்துப்போகக்கூடிய கதைகளை இயக்கினால் அத்திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றி படமாகவும் மாறி வருகிறது. இப்படிப்பட்டதான சூழலில் தான் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் தங்களது வாழ்க்கையில் வீடு என்பதை எவ்வளவு முக்கியமாக கருதுகின்றனர் என்றும் தங்களால் வாங்க முடியாத வீடு என்ற விஷயத்தை தங்களது பிள்ளைகளுக்கு படிப்பை கற்றுக் கொடுத்து அவர்களை முதலீடாக வைத்து வீட்டை வாங்கும் கனவு நிறைந்த பல குடும்பங்களின் உண்மை கதைகளை திரையில் கண்டால் எப்படி இருக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர் "3bhk" படக்குழுவினர்.

அந்த வகையில், இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கிய இத்திரைப்படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், சைத்ரா, மீதா ரகுநாத் ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் இந்த "3BHK". இந்த சூழலில் ஜூலை 4-ம் தேதியான இன்று வெளியான இந்த "3BHK" படத்தை பார்த்த அனைவரும் தனங்களது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இதற்கு முன்பு நடிகர் சூரி தனது பாராட்டை தெரிவித்து இருந்தார். அவரை தொடர்ந்து தற்பொழுது, இயக்குநர் ஹலிதா ஷமீம் இப்படத்தை பாராட்டி தனது கருத்துக்களை எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில், " ஒரு கூடு கட்ட முயலும் அழகிய தூக்கணாங் குருவிகளாய் ஒரு குடும்பம். கண் முன்னே அவர்களின் வாழ்க்கையை அழகிய தொகுப்பாய், ஒரு photo album காண்பிப்பது போல் படம் எடுத்து காட்டி, தன் பரிசுத்த சிரிப்பால், முதன் முறையாக தன் இயல்பு பிரதிபலிக்கும் வகையில் "3BHK" எனும் பேரழகு படம் எடுத்ததற்கு அன்பு ஸ்ரீ கணேஷிற்கு வாழ்த்துகள்!

பிகு: பெண்ணின் பிறந்த வீடு, ஒரு போதும் அவளுக்கு அந்நியமாகி போகாது, பாரமாகி விடாது என்று அழகாய், ஆழமாய் சொன்னதற்கு நன்றி. இன்றைய சூழலில் அவசியம் அந்த நம்பிக்கையை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது" என தனது கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: என்னா படம்.. எப்படிப்பட்ட படைப்பு..! '3BHK, பறந்து போ' படத்திற்கு நடிகர் சூரியின் கமெண்ட்ஸ்..!