அப்பொழுது எல்லாம் ஒரு படம் ஹிட் ஆகவேண்டும் என்றால் அதில் இளையராஜா இசையை வாசித்து இருக்க வேண்டும் என்பார்கள். அந்த அளவிற்கு அன்று முதல் இன்று வரை இளையராஜாவுக்கு மக்கள் மத்தியில் மவுஸ் குறையவே இல்லை. அந்த வகையில் அன்றும் இன்றும் என்றும் இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜா தான். அப்படிப்பட்டவர் "அன்னக்கிளி" என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976ம் ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 1000த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து உள்ளார். அதேசமயம், இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான "பத்ம விபூஷண்" விருது 2018ல் இவருக்கு வழங்கப்பட்டது. இத்தனை பெருமைகளுக்கும்,பாடல்களுக்கும் சொந்த காரனான இவரது பாடல்களை கேட்க முடியும் ஆனால் உபயோகிக்க முடியாது. அப்படி செய்தால் உடனே காப்பி ரைட்ஸ் போடுவார்.
இதையும் படிங்க: மக்களுக்கு குட் நியூஸ்..! தனது பிறந்த நாளில் மாஸ் அப்டேட் கொடுத்த இளையராஜா..!

இப்படி இருக்க, இளையராஜா இசையமைப்பதுடன் மேடை நிகழ்ச்சிகளிலும் இசைகளை ரசிகர்கள் மனதில் அலைபாய விடுவதில் வல்லவர். அப்படிப்பட்ட இளையராஜா சமீபத்தில் லண்டனில் 'சிம்பொனி' இசையை 1½ மணி நேரம் அரங்கேற்றி, ஆசிய கண்டத்திலேயே சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனை படைத்தார். மேலும், லிடியன் நாதஸ்வரத்தை வைத்து இளையராஜா சிம்பொனி அரங்கேற்ற போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இசையமைப்பாளர் இளையராஜா, லிடியன் இசையமைத்து காட்டியது சினிமா பிஜிஎம் தான். சிம்பொனி என்றால் என்னவென்று கற்றுக்கொண்டு வா..! என அவருக்கு அறிவுரை வழங்கி தற்பொழுது அனுப்பி வைத்தாக பதிவிட்டு இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் மிகவும் சர்ச்சை ஆனது.

இப்படிப்பட்ட இளையராஜா இதுவரை காயத்திரி, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், சட்டம் என் கையில், அவள் ஒரு பச்சை குழந்தை, முள்ளும் மலரும், பைரவி, உதிரிப்பூக்கள், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஒரு ஆலையம், குரு, நிழல்கள், காளி, நான் போட்ட சவால், நெஞ்சத்தைக் கிள்ளாதே, எல்லாம் உன் கைராசி, மூடு பனி, ஜானி, முரட்டு காளை, மீண்டும் கோகிலா, ராஜ பார்வை, கர்ஜனை, கழுகு, நெற்றிக்கண், அலைகள் ஓய்வதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, தனிகாட்டு ராஜா, மூன்றாம் பிறை, புதுக்கவிதை, எங்கேயோ கேட்ட குரல், பயணங்கள் முடிவதில்லை, சகலகலா வல்லவன், பாயும் புலி, அடுத்த வாரிசு, தங்கமகன், நான் பாடும் பாடல், கை கொடுக்கும் கை, அன்புள்ள ரஜினிகாந்த், தம்பிக்கு எந்த ஊரு, நான் மகான் அல்ல, வைதேகி காத்திருந்தாள், நல்லவனுக்கு நல்லவன், நூறாவது நாள், 24 மணி நேரம், அம்பிகை நேரில் வந்தாள், இதய கோயில் இன்னும் நிறைய படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

இந்த சூழலில், நேற்றைய தினத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய இளையராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், " எனது பிறந்த நாளிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆதலால் வாழ்த்து கூறிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த நாளில் ஒரு இனிமையான செய்தியை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என்னவெனில், லண்டனில் நான் நிகழ்த்திய சிம்பொனி இசை நிகழ்ச்சியை பலரும் பாராட்டினீர்கள்,

அந்த சிம்பொனியில் என்னுடன் பயணித்த இசை கலைஞர்களை வைத்து உலகம் முழுவதும் நம் பெருமையை சொல்வதைப்போல அவர்களை நம் நாட்டிற்கு அழைத்து கொண்டு வந்து, ஆகஸ்ட் 2-ம் தேதி, அதே போன்ற இசை நிகழ்ச்சியை உங்கள் முன்பு பிரம்மாண்டமாக நடத்தப் போகிறேன், இந்த மகிழ்ச்சியான இனிப்பு செய்தியை உலகமெங்கும் இருக்கும் எனது கோடானகோடி ரசிகர் மற்றும் மக்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்" என தெரிவித்தார். இதனை பார்த்தே மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த தருணத்தில் அடுத்த மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கொடுத்துள்ளார் இளையராஜா.

சர்வைவல் பிக்சர்ஸ் சார்பில் ஆர் எம் நானு தயாரிப்பில் விஜயபாஸ்கர் எழுதி இயக்கும் படம் தான் 'கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி'. இப்படத்தில் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தான் தற்பொழுது இசையமைக்கிறார் இளையராஜா. இதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இளையராஜா இப்படத்தின் இசையில் கலக்குவார் என கூறிக்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மக்களுக்கு குட் நியூஸ்..! தனது பிறந்த நாளில் மாஸ் அப்டேட் கொடுத்த இளையராஜா..!