தமிழ் திரையுலகில் 1983-ம் ஆண்டு 'பல்லவி அணுப்பல்லவி' என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் இதய கோவில், பகல் நிலவு, மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், சத்ரியன் அஞ்சலி தளபதி ரோஜா திருடா திருடா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, தக் லைஃப் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார்.

இப்படிப்பட்ட மணிரத்தினம் தான் இயக்கிய 'ரோஜா' திரைப்படத்திற்காக 'பிலிம்பேர் விருதும், தேசிய விருதும் வென்றார். மேலும் ஏ.ஆர். ரகுமானை திரையுலகில் அறிமுகப்படுத்த காரணமான திரைப்படமும் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இந்த 'ரோஜா' திரைப்படம் தான். அதுமட்டுமல்லாமல் மணிரத்தினத்தின் திரை உலக சாதனையை கண்டு இந்திய அரசு அவருக்கு கடந்த 2002ம் ஆண்டு 'பத்மஸ்ரீ விருதை' வழங்கி கௌரவித்தது.
இதையும் படிங்க: தமிழ் சினிமா ஏன் இப்படி பண்ணுறீங்க.. வருத்தம் தெரிவித்த அனுராக்.. பதிலடி கொடுத்த மணிரத்தினம்..!

இப்படி யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் மணிரத்தினம், திரையுலகில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கிறார். இப்படிப்பட்ட மணிரத்தினத்தின் உண்மையான பெயர் என்னவென்றால் 'கோபால ரத்தினம் சுப்பிரமணியம்' என்பதே ஆகும். இவரது வாழ்க்கை குறித்து பார்க்கையில், இவர் தனது பள்ளி படிப்பினை சென்னையில் முடித்தார். பிறகு தனது இளங்கலை படிப்பான வணிகவியல் படிப்பை சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் படித்தார்.

இதனை அடுத்து முதுகலை பட்ட படிப்பை படிக்க நினைத்த மணிரத்தினம் மும்பை ஜமுனலால் பஜாஜ் மேலாண்மை கல்லூரியில் படித்து முடித்தார். இதனை தொடர்ந்து மீண்டும் சென்னைக்கு திரும்பிய மணி ரத்தினம், சிறிது நாட்கள் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார். இதனை தொடர்ந்து, அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் திரையுலகில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆக இருப்பதால் அவர்களது உதவியுடன் சில நாட்கள் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அதற்கு பின்னரே சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

இந்த சூழலில், இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் இயக்குனர் மணிரத்தினம். இந்த நிலையில் அவரது பிறந்தநாளுக்கு பல பிரபலங்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசனும் அவருக்கு தனது வாழ்த்துக்களை எக்ஸ் தளம் வாயிலாக தெரிவித்துள்ளார். அதில், " பிறந்தநாள் வாழ்த்துக்கள், மணிரத்னம்.... நாயகன் முதல் தக் லைஃப் வரை, சக ஊழியர்கள், குடும்பத்தினர், சக கனவு காண்பவர்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, சினிமாவின் வாழ்நாள் மாணவர்களாக - நாங்கள் ஒன்றாகக் காலத்தைக் கடந்து வந்துள்ளோம். ஒவ்வொரு அத்தியாயத்திலும், உங்கள் இருப்பு பலத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது - சந்தேகத்தின் தருணங்களில் நான் திரும்பும் மனம், மற்றும் சிலரைப் போல படத்தின் மொழியுடன் ஆழமாக இணைந்த ஆன்மா.

உங்கள் கதைகள் தொடர்ந்து வெளிவரட்டும், ஏனென்றால் ஒவ்வொரு சட்டத்திலும், உங்கள் பார்வை சினிமாவிற்கு ஆழம், அழகு மற்றும் அர்த்தத்தைக் கொண்டுவருகிறது. இப்படிக்கு என்றென்றும் உங்கள் நண்பர், கமல்ஹாசன்" என பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: கன்னட மொழிக்கு எதிரானவரா கமல்..? அவதூறு பரப்புவதா.? தென்னிந்திய நடிகர் சங்கம் ஆவேசம்!!