தமிழ் திரையுலகில் மணிரத்தினம் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கிறார். இப்படிப்பட்ட இவரது உண்மையான பெயர் என்னவென்றால் 'கோபால ரத்தினம் சுப்பிரமணியம்' என்பதே ஆகும். இப்படிப்பட்ட இவர் தனது பள்ளி படிப்பினை சென்னையில் முடித்தார். பிறகு தனது இளங்கலை படிப்பான வணிகவியல் படிப்பை சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் படித்தார். இதனை அடுத்து முதுகலை பட்ட படிப்பை படிக்க நினைத்த மணிரத்தினம் மும்பை ஜமுனலால் பஜாஜ் மேலாண்மை கல்லூரியில் படித்து முடித்தார்.

இதனை அடுத்து மீண்டும் சென்னைக்கு திரும்பிய மணி ரத்தினம், சிறிது நாட்கள் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார். இதனை தொடர்ந்து, அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் திரையுலகில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆக இருப்பதால் அவர்களது உதவியுடன் சில நாட்கள் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து 1983-ம் ஆண்டு 'பல்லவி அணுப்பல்லவி' என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார்.
அதன் பின் இதய கோவில், பகல் நிலவு, மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், சத்ரியன் அஞ்சலி தளபதி ரோஜா திருடா திருடா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, தக் லைஃப் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: என்னடா இது கண்ணப்பா படத்துக்கு வந்த சோதனை..! படம் வெளியாகும் நேரத்தில் ஹார்ட்டிஸ்க்கை பறிகொடுத்த டீம்..!

இப்படிப்பட்ட மணிரத்தினம் தான் இயக்கிய 'ரோஜா' திரைப்படத்திற்காக 'பிலிம்பேர் விருதும், தேசிய விருதும் வென்றார். மேலும் ஏ.ஆர். ரகுமானை திரையுலகில் அறிமுகப்படுத்த காரணமான திரைப்படமும் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இந்த 'ரோஜா' திரைப்படம் தான். அதுமட்டுமல்லாமல் மணிரத்தினத்தின் திரை உலக சாதனையை கண்டு இந்திய அரசு அவருக்கு கடந்த 2002ம் ஆண்டு 'பத்மஸ்ரீ விருதை' வழங்கி கௌரவித்தது. இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான மணிரத்தினம், தற்பொழுது கமல்ஹாசன், த்ரிஷா, சிம்பு உள்ளிட்ட பிரபல நடிகர்களை வைத்து "தக் லைஃப்" திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் அனுராக் காஷ்யப் தெரிவித்த கேள்வி ஒன்று இயக்குனர் மணிரத்தினத்திடம் கேட்கப்பட்டது. அதில் "சில வருடங்களாகவே தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில் மட்டுமல்ல பாடல்களில் கூட ஆங்கில வார்த்தைகளின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கி வரும் மணிரத்னம், தக் லைப் என டைட்டில் வைத்ததும் அந்த படத்தின் பாடல்களில் ஆங்கில சொற்கள் அதிகம் இடம் பிடித்திருப்பதையும் குறித்தும் அவர் தனது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார் இதற்கு உங்களது பதில் என்ன?" என கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த மணிரத்தினம், "நான் இயக்கிய பல படங்களின் டைட்டில்கள் பெரும்பாலும் தமிழில் தான் இருந்திருக்கின்றன. அதற்க்காக இப்படியே பண்ண வேண்டும் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் நம்மை நாமே அடைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. விதிகள் சொல்வது படி தான் நாம் போய்க்கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியமும் நமக்கு இல்லை. இது அனைவருக்கும் உண்டான சமமான மீடியம் என்று நான் நினைக்கிறேன். அது நம் பார்வைக்கு சரியாக இருந்தால் அதன்படி நீங்கள் போகலாம். எனக்கு புரியல, உங்களை ஏன்? நீங்கள் தவறான இலக்கணத்துக்குள்ளையே அடைத்துக் கொள்கிறீர்கள்? அதிலிருந்து வெளியே வாங்க.

சில நேரங்களில் "சுகர் பேபி" போன்ற பாடல்கள் அனைவருக்கும் தேவைப்படும் அல்லவா. எப்பொழுமே ஒரு வழி மட்டுமே நமக்கு இல்லை.. மற்றொன்றும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: கன்னட மொழிக்கு எதிரானவரா கமல்..? அவதூறு பரப்புவதா.? தென்னிந்திய நடிகர் சங்கம் ஆவேசம்!!