உலகமே உன்னை எதிர்த்தாலும் நீ தோத்துட்ட தோத்துட்டன்னு சொன்னாலும் உன்னால முடியாதுன்னு நீ நினைக்கிற வரைக்கும் முயற்சி செய்திட்டே இரு என நடிகர் அஜித்குமார் திரைப்படத்தில் சொல்வதைப் போலத்தான் தற்பொழுது தக் லைஃப் திரைப்படத்தின் பிரச்சனைகளும் இருக்கிறது.

தக் லைஃப் திரைப்படம் இசை வெளியீட்டின் போது கன்னட நடிகர் சிவராஜ்குமாரை அழைத்து வந்த நடிகர் கமலஹாசன் அவரைப் பார்த்து தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னட மொழி என்றும் அதனால் நீங்கள் எங்கள் உறவினர் என்றும் கூறி பெரிய சர்ச்சையே கிளப்பினார். இந்த வீடியோ காட்சிகளில் பெரிய தவறுகள் ஒன்றுமில்லையே என பலரும் கூறி வந்தாலும் சில அமைப்புகள் அது எப்படி..? கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என கமலஹாசன் சொல்லுவார். அவர் தமிழ் வல்லுனரா..? என பல கேள்விகளைக் கேட்டு அவரை திக்குமுக்காட வைத்தனர். மேலும், இந்த திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது எனவும் நடிகர் கமலஹாசன், தான் கூறியதற்கு மன்னிப்பு கேட்கும் வரைக்கும் இத்திரைப்படத்தை வெளியிட விடமாட்டோம் அதையும் மீறி நீங்கள் வெளியிட்டால் தியேட்டர்களை கொளுத்துவோம் மக்களைப் பார்க்க வர விடமாட்டோம் என பல அச்சுறுத்தல்களை கொடுத்து வந்தனர்.
இதையும் படிங்க: சுப்ரிம் கோர்ட் கொடுத்த டோஸ்.. அதிரடி முடிவெடுத்த கன்னட துணை முதல்வர்.. விரைவில் தக் லைஃப் ரிலீஸ்..!

ஆயினும் தமிழகத்தில் தக் லைஃப் திரைப்படமானது வெளியாகி பெரும் வரவேற்பை பெரும் என நினைத்த நிலையில் இத்திரைப்படம் சரிவர இங்கு ஓடவில்லை. ஆதலால் எப்படியாவது இந்த திரைப்படத்தை கன்னடத்தில் ஓட்டியாவது செலவுகளை ஈடு கட்ட வேண்டும் என மணிரத்தினமும் தயாரிப்பாளர்களும் போராடி வருகின்றனர். ஒரு பக்கம் மன்னிப்பு கேட்க போவதில்லை என கமலஹாசன் முறுக்கி நிற்க மறுப்பக்கம் கன்னடர்களும் திரைப்படத்தை வெளியிட விட மாட்டோம் என முறுக்கி கொண்டு நிற்கின்றனர். ஆதலால் வேறு வழியின்றி திரைப்படத்தை வெளியிடவும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடியது படக்குழு. ஆனால் அங்கு சென்றாலும் நீதிபதியும் கமலஹாசனை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் என வலியுறுத்த வேறு வழி இல்லாமல் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

அங்கு இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்லவும் இத்திரைப்படத்தை தடை விதிப்பேன் என சொல்லவும் நீதிமன்றத்திற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? என சரமாரி கேள்விகளை கேட்டது. அதுமட்டுமில்லாமல் கர்நாடக அரசாங்கம் மக்களை மிரட்டும் அந்த அமைப்புகளை இதுவரைக்கும் என்ன செய்திருக்கிறது எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது என்றெல்லாம் தங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்களுக்கும் உத்தரவு போட்டது. இதனை அடுத்து பல தரப்பட்ட வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், முறையாக திரையிட அனுமதி பெற்ற இத்திரைப்படத்தை தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை எனவும் ஆதலால் தக் லைஃப் திரைப்படத்தை மீண்டும் கர்நாடகா தியேட்டர்களில் வெளியிட அனுமதி வழங்கியது. மேலும் அதற்குண்டான பாதுகாப்புகளை காவல்துறையினர் வழங்க வேண்டும் எனவும் அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்கி பல காவல்துறையினர் பிரச்சனை செய்யும் அனைத்து அமைப்புகளுக்கும் இன்று காலை நேரடியாக சென்று எச்சரிக்கை நோட்டீசை கொடுத்து வருகின்றனர். அந்த நோட்டீஸில் பார்த்தால் உங்களுக்கு போராட்டம் நடத்த வேண்டும் என்று எண்ணம் இருந்தால் பெங்களூரில் உள்ள மைதானத்திற்கு சென்று போராட்டம் நடத்த வேண்டும் என்றும் தியேட்டர்களுக்கு முன்பாக எந்த வித போராட்டங்களும் நடத்தக்கூடாது என்றும் மக்களை அச்சுறுத்தும் விதமாக எந்த காரியங்களையும் செய்யக்கூடாது மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் தரப்பிலிருந்து நோட்டிஸ்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இப்படியான வேலையில் ஒரு வழியாக கமலஹாசனின் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக போகிறது என்று அவரது கன்னட ரசிகர்கள் ஒருபக்கம் மகிழ்ச்சியில் இருக்கும் இந்த வேலையில், மறுபக்கம் தமிழர்கள் அனைவரும் பரவாயில்லையே கமலஹாசன் மன்னிப்பே கேட்காமல் சாதித்து விட்டாரே என்று கூறிவருகின்றனர். இந்த நேரத்தில் கமலஹாசன் படத்தை திரையிட முடியாத அளவிற்கு மிகப்பெரிய அணுகுண்டியை வீசி இருக்கிறார் விநியோகஸ்தர் ஒருவர். இதனைக் குறித்து அவர் பேசுகையில், "தக்கலைப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியிட தடைகள் இல்லை என்றாலும் தியேட்டரில் வெளியிட வாய்ப்பே இல்லை என கூறியிருக்கிறார்.

அதற்கு காரணம், நாளை முதல் கர்நாடகா தியேட்டர்களில் மூன்று தமிழ் திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட போதிய அளவுக்கு திரையரங்குகள் இங்கு இல்லை. அதுமட்டுமல்லாமல் இன்னும் இரண்டு வாரங்களில் இத்திரைப்படம் ஓடிடியிலேயே வெளியாகப் போகிறது என்பதால் கர்நாடகாவில் படத்தை தற்போதைக்கு திரையிட முடியாது திரையிட்டாலும் அதில் பயனும் கிடையாது" என கூறியிருக்கிறார்.

இப்படி ஒரு செக் வைப்பார்கள் என எதிர்பாராத பட குழுவினர் தற்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றனர். மேலும் இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் கவலைப்படாதீர்கள் கண்டிப்பாக கமல்ஹாசன் இதற்கு ஒரு தீர்வை இந்த நேரத்தில் யோசித்து இருப்பார். விரைவில் அது வெளிப்படும் என படக்குழுவினரை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: என்னையா நடக்குது இங்க... கன்னடத்தில் பேசி வீடியோ வெளியிட்ட கமல்ஹாசன்... குழப்பத்தில் ரசிகர்கள்...!