சினிமாக்களில் நடிகை என்றாலே ஒரு குதூகலம் தான். அதுமட்டுமல்லாமல் கவர்ச்சி நடிகைகள் என்றால் அவர்களுக்கு பேராதரவு அதிகம். காரணம் இவர்களது அழகில் வருடி இழுக்கக்கூடிய இளசுகள் அவர்களை தங்கள் வாழ்வின் கதாநாயகிகளாகவே ஏற்றுக் கொள்கின்றனர். அந்த அளவிற்கு தனது முகத்தின் அழகில் அனைவரையும் மயக்கக்கூடிய நடிகைகள் இன்றும் பலர் இருக்கின்றனர். சினிமாவில் திறமைகளை வெளிப்படுத்தும் நடிகைகளை காட்டிலும் அதிக கவர்ச்சிகளை கொடுக்கும் நடிகைகளுக்கு இன்று ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறது.

அந்த வகையில், கண்களுக்கு மையை போட்டு, உதட்டுக்கு சாயம் பூசி, இடையழகால் மயக்கும் நடிகைகள் வலம் வரும் காலமாக இந்த காலம் மாறி இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த சினிமாவில் தற்பொழுது ஹீரோக்களுக்கு பஞ்சம் இருந்தாலும் ஹீரோயின்களுக்கு பஞ்சமே இல்லை என்று தான் கூற முடியும். கோலிவுட் சினிமாக்களில் ஓரளவு கவர்ச்சிகளை காண்பித்தாலே உருகிவிடும் இளசுகள் மத்தியில் பாலிவுட் சினிமாவை எடுத்தால் கவர்ச்சியை மட்டுமே ஆதாரமாக வைத்து செயல்படுகிறது அங்குள்ள சினிமாக்கள். ஏனெனில் கவர்ச்சி இல்லையெனில் சினிமா எதற்கு? என்று சொல்லும் நடைமுறை அங்கு வளர்ந்து விட்டது. ஆதலால் தான் ஹீரோயின்கள் குட்டை பாவாடையில் வருவதும், நீச்சல் உடையில் நடனம் ஆடுவதும் என பல பல வித்தைகளை காமித்து வருகின்றனர் பாலிவுட் வட்டாரங்கள்.
இதையும் படிங்க: செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!

அவர்கள் வரிசையில் தற்பொழுது அனைவருக்கும் தெரிந்த அட்டகாசமான நடிகை என்றால் அவர்தான் நடிகை மாளவிகா மோகனன். இவரைப் பார்த்த உடனே, எங்கேயோ பார்த்திருக்கிறேனே... என உங்கள் கண்களுக்கு தெரியலாம். ஆம்..லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக வந்தவர் தான் இந்த மாளவிகா மோகனன். பார்க்க அழகாக இருக்கும் இவரை குறித்து சொல்லவேண்டுமானால், இவர் மும்பையை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் இப்பொழுது வசிப்பது என்னமோ கேரள மாநிலம் பையனூரில் தான். அதுமட்டுமல்லாமல் இதுவரைக்கும் இவர் ஹிந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் நடித்தும் இருக்கிறார்.

தமிழில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "பேட்ட" திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார். அப்பொழுது கவர்ச்சியே இல்லாத சாதாரண பெண் என நினைத்த இவரை கவர்ச்சியின் உச்சநாயகி என்பதை instagram-க்கு சென்று பார்த்தால் தான் தெரியும். அந்த அளவிற்கு இவரது நளினமான தோற்றம் பலரையும் வருடி இழுத்து உள்ளது. இப்படிப்பட்ட மாளவிகா மோகனன் திரையுலகில் 2013-ம் ஆண்டு 'பட்டம் போலே' என்ற படத்தில் 'ரியா' என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இது மலையாள திரைப்படம் என்பதால் மலையாள திரையுலகில் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது அந்த திரைப்படம். அடுத்ததாக 2015 ஆம் ஆண்டு மலையாள படமான 'நிர் நாயக்கம்' என்ற படத்தில் 'சரண்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாளத்தை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு கன்னட திரை உலகில் காலடி தடத்தை பதித்த மாளவிகா மோகனன் 'நானு மட்டும் வரலட்சுமி' என்ற திரைப்படத்தில் நடித்து அங்கேயும் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து, ஹிந்தியில் 2018 ஆம் ஆண்டு 'பியான்ட் த கிளவுட்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இப்படி மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் நடித்த இவரை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர் இயக்கிய 'பேட்ட' திரைப்படத்தில் 'பூங்கொடி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இதுதான் தமிழில் அவரது முதல் அறிமுகம். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' திரைப்படத்தில் 'சாருலதா' என்ற கேரக்டரில் நடித்தார். அடுத்ததாக 2022 ஆம் ஆண்டு வெளியான 'மாறன்' திரைப்படத்தில் 'தாரா' என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பலரது மனதையும் கொள்ளை கொண்டு சென்றார். இப்படி திரையில் தனது அழகிய தோற்றங்களை காண்பித்து வரும் மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் பகுதியிலும் தனது கூடுதல் அழகை குறையில்லாமல் காண்பித்து வருகிறார்.

அப்படி அவர் ஒரு போட்டோ சூட்டை நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதனைப் பார்த்த ஒரு நெட்டிசன் அவரை விமர்சித்து எக்ஸ் தளத்தில் கமெண்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் " போட்டோ சூட்...மாடலிங் செய்ய நீங்கள் போடும் உழைப்பை படத்தில் போட்டிருந்தால் இன்று பெரியாளாக வந்திருக்கலாம். அதனை நீங்கள் செய்வதே இல்லை" என தெரிவித்திருக்கிறார். பாவம் இது மாளவிகா மோகனின் கண்ணில் படாது என நினைத்து அவர் போட்ட பதிவுக்கு திடீரென மாளவிகா பதிலளித்து இருக்கிறார். அவரது பதிவில் " பிரதர்... நான் 'தங்களான்' படத்தில் போட்ட உழைப்பு.. அதற்காக நான் மாறிய ட்ரான்ஸ்வர்மேஷன் ஆகியவற்றை நீங்கள் பார்க்கவே இல்லை என நினைக்கிறேன். உழைப்பை பார்க்காத உங்களை நினைத்து என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை" என தக் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதனைப் பார்த்த இணையவாசிகள், வந்தோமா.. போட்டோவ பார்த்தோமா.. போனோமான்னு இல்லாம இதெல்லாம் நமக்கு தேவையா கோபி என அவரை கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கவர்ச்சியின் உச்சத்தில் நடிகை ரித்திகா சிங்..! இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!