தமிழ் திரையுலக சரித்திரத்திலேயே பிரபலமான இயக்குனர் என்றால் கே.எஸ்.ரவிக்குமார், பாரதிராஜா, சுந்தர்.சி என பலரும் கூறுவர். இவர்கள் வரிசையில் படத்தை இயக்குவதில் அடித்துக் கொள்ள முடியாத ஒரு இயக்குனர் என்றால் அவர் தான் இயக்குனர் மணிரத்தினம். இவர் தமிழ் திரையுலகில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கிறார். இப்படிப்பட்ட மணிரத்தினத்தின் உண்மையான பெயர் என்னவென்றால் 'கோபால ரத்தினம் சுப்பிரமணியம்' என்பதே ஆகும். இப்படிப்பட்ட இவர் தனது பள்ளி படிப்பினை சென்னையில் முடித்தார்.

பிறகு தனது இளங்கலை படிப்பான வணிகவியல் படிப்பை சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் படித்தார். இதனை அடுத்து முதுகலை பட்ட படிப்பை படிக்க நினைத்த மணிரத்தினம் மும்பை ஜமுனலால் பஜாஜ் மேலாண்மை கல்லூரியில் படித்து முடித்தார். இதனை அடுத்து மீண்டும் சென்னைக்கு திரும்பிய மணி ரத்தினம், சிறிது நாட்கள் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார். இதனை தொடர்ந்து, அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் திரையுலகில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆக இருப்பதால் அவர்களது உதவியுடன் சில நாட்கள் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.
இதையும் படிங்க: சொகுசு கப்பல் காரில் பிறந்த நாளை கொண்டாடிய ஆல்யா மானசா..! சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்..!

இதனைத் தொடர்ந்து 1983-ம் ஆண்டு 'பல்லவி அணுப்பல்லவி' என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் இதய கோவில், பகல் நிலவு, மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், சத்ரியன் அஞ்சலி தளபதி ரோஜா திருடா திருடா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, தக் லைஃப் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார்.

இப்படிப்பட்ட மணிரத்தினம் தான் இயக்கிய 'ரோஜா' திரைப்படத்திற்காக 'பிலிம்பேர் விருதும், தேசிய விருதும் வென்றார். மேலும் ஏ.ஆர். ரகுமானை திரையுலகில் அறிமுகப்படுத்த காரணமான திரைப்படமும் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இந்த 'ரோஜா' திரைப்படம் தான். அதுமட்டுமல்லாமல் மணிரத்தினத்தின் திரை உலக சாதனையை கண்டு இந்திய அரசு அவருக்கு கடந்த 2002ம் ஆண்டு 'பத்மஸ்ரீ விருதை' வழங்கி கௌரவித்தது.

இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான மணிரத்தினம், தற்பொழுது கமல்ஹாசன், த்ரிஷா, சிம்பு உள்ளிட்ட பிரபல நடிகர்களை வைத்து "தக் லைஃப்" திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், ரஜினியுடன் எப்பொழுது படம் பண்ணபோகிறீர்கள் என கேட்ட ரசிகர்களுக்கு பதில் அளித்தார். அதில், " சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை வைத்து படம் பண்ண வேணுமானால் முதலில் அவரிடம் ஓகேவா என கேட்கணும். காரணம், அவருக்கு பிடித்தபடி அவருக்கு ஏற்றபடி கதை இருந்தால், அவருக்கு அந்த கதையை கேட்க நேரம் இருந்தால், கண்டிப்பாக அவரை வைத்து படம் பண்ணும் விஷயம் குறித்து நான் கேட்பேன்.

ஏனெனில் மிகவும் பெரிய ஸ்டாருடன் படம் பன்ன போகிறோம் என்றால், அதற்கு ஏற்ற தீனி நம்மிடம் முதலில் இருக்க வேண்டும். நான் ஒரு சாதாரணமான கதையை கையில் வைத்துக்கொண்டு அவ்வளவு பெரிய ஸ்டாரான ரஜினியிடம் சென்று கேட்க முடியாது. அவர் இதுவரை செய்யாத ஒன்றை வித்தியாசமாக பண்ண வேண்டும், அதே சமயம் அவருடைய மார்க்கெட்டையும் நினைவு வைத்துக்கொண்டும் செயல்பட வேண்டும்" என கூறினார்.
இதையும் படிங்க: எஸ்கேவின் 'பராசக்தி' பட டைட்டிலை கொடுக்க இதுதான் காரணம்..! உண்மையை உடைத்த விஜய் ஆண்டனி..!