தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர் என பன்முகத்தன்மை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கையில் வைத்திருப்பவர் தான் விஜய் ஆண்டனி. இவரது படங்களின் தலைப்புகள் எப்படி வித்தியாசமாக இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல் இவரும் வித்தியாசமானவர்தான். சில நேரங்களில் இவரது பேச்சுக்கள் புரியாததால் சர்ச்சைகளுக்கு உள்ளாக சிக்கிக் கொள்வார். பின்னர் மீண்டும் அதற்குண்டான விளக்கத்தை கொடுத்து அந்த சர்ச்சையில் இருந்து மீண்டு வருவார்.

சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் பிறந்தவர். தனது ஏழு வயதிலேயே தந்தையை இழந்த விஜய் ஆண்டனி தனது இளங்கலை படிப்பினை சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பயின்றார். இப்படிப்பட்ட விஜய் ஆண்டனி தன் வாழ்க்கையில் முன்னேற நினைத்து தனக்கான 'ஆடியோ ஃபைல்ஸ்' என்ற ஒலி அரங்கை உருவாக்கினார். அதன் பின், ஆவணப் படங்கள் முதல் தொலைக்காட்சிகளில் உள்ள நிகழ்ச்சிகளுக்கு தனது இசைகளை ஜங்கிள்ஸ்சாக அமைத்துக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் பிரபல தனியா தொலைக்காட்சியில் "சின்ன பாப்பா பெரிய பாப்பா" என்ற தொடருக்கு இசையமைத்தவர் இவரே.
இதையும் படிங்க: மாஸ் ஹிட் கொடுக்கப்போகும் விஜய் ஆண்டனியின் படம்..! ட்ரெய்லரில் தெறிக்க விட்ட திரில்லர் காட்சிகள்...!

இதனை அடுத்து 2006-ம் ஆண்டு வெளியான "கனா காணும் காலங்கள்", 2007-ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட "காதலிக்க நேரமில்லை" ஆகிய தொடர்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி. இப்படி இருக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் காதுகளில் இவரது இசைகள் பட, தனது 'டிஷ்யூம்' திரைப்படத்திற்கு இசையமைக்க விஜய் ஆண்டனியை அழைத்தார். இந்தப் படத்தில் அவருடைய மெட்டுக்கள் அனைத்தும் கேட்பவர்களை பரவசப்படுத்த, பட்டி தொட்டி எங்கும் விஜய் ஆண்டனியின் பெயர் பரவத் தொடங்கியது. இவரது பாட்டுக்கள் இன்றும் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. அதன் வகையில், நாக்கு முக்க பாடல், ஆத்திச்சூடி, டைலமோ உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவையாக உள்ளது. இதனை அடுத்து 2012 ஆம் ஆண்டிற்கு மேல் திரையுலகிற்க்குள் நடிகராகவும் அறிமுகமானார். இவரது நடிப்பின் திறமையும் கதையை தேர்ந்தெடுக்கும் வண்ணமும் பலருக்கும் பிடித்த போக இவரை இசையமைப்பாளராகவும், பாடகராகவும் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

அதுமட்டுமல்லாமல் இதுவறை விஜய் ஆண்டனி படங்கள் என பார்த்தால் சலீம், இந்தியா பாக்கிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், அண்ணாதுரை, எமன், காளி, திமிரு புடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன், கொலை, பிச்சைக்காரன் 2, தமிழரசன், ரத்தம், ஹிட்லர், ரோமியோ, வள்ளி மயில், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது பாடலில் எப்படி வித்தியாசங்கள் உள்ளதோ அதே போல் இவரது படத்தின் டைட்டில்களும் வித்தியாசமானவையே. இந்த சூழலில், மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட் செய்து தற்பொழுது இயக்குனராக மாறி இருக்கும் லியோ ஜான் பால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க க்ரைம் திரில்லர் படமாகவே உருவாக்கப்பட்ட இப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாக உள்ளது.

இப்பட ட்ரைலர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி பராசக்தி டைட்டில் குறித்து தனது கருத்துக்களை கூறினார். அவர் பேசுகையில், பொதுவாக சினிமா துறையில் டைட்டில்களை பதிவு செய்வதற்கு என யூனியன்கள் இருக்கிறது. சிவகார்த்திகேயனின் பராசக்தி டைட்டில் விவகாரம் எதார்த்தமாக நடந்த ஒன்று. உண்மையில் பராசக்தி படக்குழுவிற்கு அந்த டைட்டில் என்னுடையது என தெரியாமல் அறிவித்துவிட்டார்கள். இவர்கள் அறிவித்த மறுகணமே அந்த டைட்டில் மக்கள் மனதிலும் ஆழமாக பதிந்துவிட்டது. இதனை பார்த்து எனக்கு மனசுகேக்காமல் நானே அந்த டைட்டிலை அவர்களுக்காக கொடுத்துவிட்டேன். பணத்திற்காகவோ பெயருக்காகவோ அல்ல, முழுக்க முழுக்க நட்பு ரீதியாகத்தான் அதை நான் செய்தேன். ஒரு சினிமாக்காரனாக எனக்கும் தயாரிப்பாளரின் வலி வருத்தம் புரியும்" என்றார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு ஆதரவான சர்ச்சை பதிவு..! விளக்கம் கொடுத்து எஸ்கேப் ஆன விஜய் ஆண்டனி..!