அன்றைய காலத்து சினிமாக்கள் மக்களின் அறிவை பெருக்கும் வகையிலும் சுதந்திரத்தை நோக்கி செலுத்தும் வகையிலும், அடிமைத்தனம் என்பதை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பதை நோக்கியும் பயணித்துக் கொண்டிருந்தது. சினிமாவைப் பார்த்து இன்று பல மூட நம்பிக்கைகளிலிருந்து வெளியே வந்திருக்கின்றனர் பல மக்கள். ஆயினும் நாட்கள் செல்ல செல்ல சினிமாக்கள் மூலமாக வந்த நன்மைகள் அனைத்தும் தற்பொழுது தீயவையாக மாறி வருகிறது.

குறிப்பாக சினிமாக்களில் அவர்னஸ் என்ற பெயரில் பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது, தீவிரவாதம் செய்வது, போதை பொருள் பயன்படுத்துவது, மறைமுகமாக கொலைகளை எப்படி செய்வது, என்பதை எல்லாம் அவர்னஸ் என்ற பெயரில் இவர்களே சினிமாவில் காண்பித்து விடுவதால் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை இதனை மோட்டிவேஷனாக எடுத்து கொண்டு அதனையே செய்து வருகின்றனர். இதனைப் பார்க்கும் பல பெற்றோர்கள் இனி சினிமாக்களே வேண்டாம் என்று ஒதுக்கும் அளவிற்கு தற்பொழுது சினிமாக்கள் அனைத்தும் மாறி வருகிறது.
இதையும் படிங்க: ஜெ. கையில் கலைமாமணி விருது.. நடிகர் பாண்டியராஜனின் பாட்டி மறைவு.. திரைப் பிரபலங்கள் இரங்கல்..!

மொத்தமாக கவர்ச்சிகளை அப்பட்டமாக காண்பித்து வந்த ஹாலிவுட்டே ஆக்சன்களையும் ரொமான்ஸ்களையும் மறந்து குடும்பம் சென்டிமென்ட் என படங்களை எடுத்துக் கொண்டு வரும் இந்த வேலையில் கோலிவுட், பாலிவுட் படங்கள் சென்டிமென்ட் காட்சிகளையும் குடும்பத்தின் காட்சிகளையும் மறந்து முழுவதுமாக ரொமான்ஸ் காட்சிகளையும் உச்சபட்ச கவர்ச்சி காட்சிகளையும் காண்பித்து தற்பொழுது உள்ள சிறுசுகளின் மனசை கெடுத்து வருகிறது.
இப்படிப்பட்ட இயக்கங்களின் மத்தியில் சில இயக்குனர்கள் இன்றும் அடிமைத்தனம், ஜாதி ரீதியான அடிமைத்தனம், என பல அடிமைத்தனங்கள் நம் நாட்டில் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் அனைவரும் சமம் என்பதை காண்பிக்கும் வகையிலும் சில திரைப்படங்களை எடுத்து வருகின்றனர். அதில் ஒருவர் தான் பிரபல எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான மாரி செல்வராஜ்.

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாய தொழிலைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவர் தான் இந்த மாரி செல்வராஜ். இப்படிப்பட்ட செல்வராஜ் தனது சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு பிழைப்பதற்காக வந்தவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஆனந்த விகடனில் 'மறக்க நினைக்கிறேன்' என்ற தொடரையும் எழுதி இருக்கிறார். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த இவர் 2018-ம் ஆண்டு 'பரியேறும் பெருமாள்' என்ற திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் ஃபேமஸானார். இதனை அடுத்து 2021-ம் ஆண்டு தனுஷை வைத்து 'கர்ணன்' திரைப்படத்தையும், 2023-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலுவை வைத்து 'மாமன்னன்' திரைப்படத்தையும், 2024-ம் ஆண்டு 'வாழை' திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார்.

இப்படிப்பட்ட இவர் தற்பொழுது விக்ரமின் மகனான துருவ்விக்ரமை வைத்து 'பைசன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக நடிகர் தனுசை வைத்தும் ஒரு படத்தை இயக்க தயார் நிலையில் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் சென்னையில் நடைபெற்ற 'பறந்து போ' பட விழாவிலும் கலந்து கொண்ட மாரி செல்வராஜ் தனது குருவான இயக்குனர் ராம் பற்றி நெகிழ்ச்சி பொங்க பேசினார். அவர் பேசுகையில், " நான் ராம் சாரிடம் ஆரம்பத்தில் பணியாற்றும் பொழுது மிகவும் வெள்ளந்தியாக இருந்திருந்தேன்.
குறிப்பாக 'தங்கமீன்கள்' படத்தை அவர் இயக்கிக் கொண்டிருந்த பொழுது அவருக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்தேன், அந்த வேலையில் என் அப்பாவுக்கு பாம்பு கடித்து விட்டதாக செய்தி வர கண் கலங்கியபடி அவரிடத்தில் சென்று கூறினேன். உடனே எதையும் யோசிக்காத அவர் எனக்கு திருநெல்வேலிக்கு பிளைட் டிக்கெட் புக் செய்து கொடுத்தார். அதனைக் கேட்டவுடன் திகைத்துப் போன நான் அழுதபடியே என்னிடம் பாஸ்போர்ட் இல்லையே நான் எப்படி பிளைட்டில் செல்வது என கலங்கினேன்... அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னை பார்த்துவிட்டு திருநெல்வேலிக்கு செல்வதற்கெல்லாம் பாஸ்போர்ட் தேவை இல்லை நீ போ என என்னை அனுப்பி வைத்தார்.

அதனை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் எனக்கு சிரிப்பாக தான் இருக்கிறது... இருப்பினும் தற்பொழுது வளர்ந்து உள்ள நான் சமீபத்தில் எனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு ஜப்பானுக்கு சென்று இருந்தேன். அங்கு எனது மகன் தொலைந்து போக, உடனே ராம் சாரை தான் நினைத்தேன். காரணம், என் மகன் ஐஸ்கிரீம் கேட்டாலும் கூட உடனே என்னை ராம் சார் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் அவர் எனக்கு ஐஸ்கிரீம் கொடுப்பார் என சொல்லுவான். அந்த அளவிற்கு அவர் என் மகன் மீதும் பாசமாக இருப்பவர்..
உண்மையில் ராம் சாருக்கு நகைச்சுவை குணம் அதிகமாகவே இருக்கும் ஆதலால் தான் அவர் எப்பொழுதுமே நகைச்சுவை திரைப்படத்தை மட்டுமே பார்ப்பார்.. ஒரு கட்டத்தில் 'களவாணி' திரைப்படத்தை பார்த்த அவர் என்னிடம் வந்து நீ ஏன் களவாணி போன்ற நகைச்சுவையான திரைப்படங்களை எடுக்கக்கூடாது என சொல்லி விட்டு சென்றார்... இப்படி இருக்க இந்த 'பறந்து போ' படத்தில் நிறைய காமெடிகள் இருக்கிறது அதனை அனைவரும் கண்டு களிக்க வேண்டும்" என கூறி சென்றார்
இதையும் படிங்க: ரூ.33,400 கோடி சொத்துக்கு வாரிசு... பெரிய இடத்து மாப்பிள்ளையாகப் போகும் அனிருத் - யார் அந்த மணப்பெண்?