என்றைக்கு தனியார் நிறுவனங்கள் மொபைல் டேட்டாக்களை வாரி வழங்கியதோ அன்றிலிருந்து தொலைக்காட்சிகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சகஜமாக குறைந்து கொண்டே வருகிறது. இப்படி இருக்க, செல்போன்கள் ஓடிடி தளங்களின் ராஜ்யங்கள் வருவதற்கு முன்பு தொலைக்காட்சி ராஜ்யங்களே நாடுகள் முழுவதும் அதிகம் இருந்தது. அப்படிப்பட்டதான வேளையில் தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் சீரியல்களின் மோகம் அதிகமாக இருந்தது. குறிப்பாக கோலங்கள், ராஜா ராணி, சின்ன பாப்பா பெரிய பாப்பா, வாணி ராணி, மெட்டி ஒலி, தென்றல் என பல சீரியல்கள் இல்லத்தரசிகளின் மனதை கொள்ளை கொண்டு வந்தது.

ஆனால் இப்படிப்பட்டவர்களின் மனதிலும் இளசுகளின் மனதிலும் சீரியல்களை அதிகமாக பார்க்கத் தூண்டியது வடநாட்டு சீரியல்கள் என்றே சொல்லலாம். இப்படி ஹிந்தி மொழியில் உருவாக்கப்பட்ட சீரியல்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒலிபரப்பான பின்பு இல்லத்தரசிகள் முதல் இளசுகள் வரை இப்படிப்பட்ட தானா சீரியல்களை விரும்ப ஆரம்பித்தனர். அதற்கு இணங்கவே தற்பொழுது சீரியல்களின் பேட்டன்கள் அனைத்தும் மாறி இருக்கிறது. இப்படிப்பட்ட சீரியல்கள் அனைத்தும் பேட்டன்கள் மாற காரணம் எனப் பார்த்தால் பாலிமர் தொலைக்காட்சி மட்டுமே. பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் இன்றும் நம்மால் மறக்க முடியாதவையாகவே உள்ளது. அந்த வகையில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சீரியல் என்றால் "உள்ளம் கொள்ளை போகுதடா.. மற்றும் மூன்று முடிச்சு.." இந்த சீரியல்களுக்கு பல ஆண்களும் அடிமையாக இருந்தனர் என்றால் மிகை ஆகாது.
இதையும் படிங்க: தக் லைஃப் ஜிங்குச்சான் பாடல் சானியாவா இது? கிக் ஏற்றும் ரீசென்ட் போட்டோஸ்!

அப்படிப்பட்ட இந்த 'மூன்று முடிச்சு' சீரியலில் அக்கா தங்கை இருவருடைய பாசப் போராட்டத்தையும் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை இவர்கள் எதிர்கொள்ளும் விதங்கள் அனைத்தையும் வைத்து இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. காதலுக்கு காதலும், பிரச்சனைகளுக்கு சுவாரசியமும் குறையாத வகையில் இருந்த இந்த சீரியல் இன்றும் பலரது மனதில் நீங்கா இடம் பிடித்தவையாக இருக்கிறது. இதனைப் பார்த்த மற்ற தொலைக்காட்சிகள் இப்படியும் சீரியல்களை கொண்டு வந்தால் மக்கள் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து பல ஹிந்தி சீரியல்களை தமிழில் டப்பிங் செய்து இங்கு ஒளிபரப்பு வந்தனர். அப்படியாகத்தான் நமக்கு வந்தது சக்திமான் முதல் பவர் ரேஞ்சர்ஸ் வரை.

ஹிந்தியில் "சசுரால் சீமக்கா" என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்டு தமிழில் 'மூன்று முடிச்சு' என மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பான இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை தீபிகா அப்பொழுதே பல ரசிகர்களின் கனவு நாயகியாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஹிந்தி பிக் பாஸ் 12வது சீசனில் பலரது மனதைக் கவர்ந்த தீபிகா டைட்டில் வின்னராகவும் வெற்றி பெற்றார். இப்படி பல ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் தீபிகா தற்பொழுது இரண்டாம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி தகவலை பதிவிட்டு இருக்கிறார்.

ஒரு வாரத்திற்கு முன்பு அவர் கணவர் ஷாயிப் இப்ராகிம் தன்னுடைய யூடியூப் சேனலில் தீபிகாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து தீபிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரண்டாம் நிலை கல்லீரல் இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர். மேலும் இன்ஸ்டாகிராமில் இதனைப் பற்றி கூறியிருக்கும் தீபிகா, "கடந்த சில வாரங்களாகவே மிகவும் கடினமான நாட்களை நாங்கள் கடந்து வந்து கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கும் தெரியும். திடீரென எனது வயிற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வலியின் காரணமாக மருத்துவமனைக்கு சென்று இருந்தேன். அங்கு என்னை பரிசோதித்த மருத்துவர்கள் கல்லீரல் டென்னிஸ் பந்து அளவிற்கு பெரிய புற்றுநோய் கட்டி இருப்பதாக தெரிவித்தனர்.

பின்னர் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் இது இரண்டாம் கட்ட நிலையில் இருக்கும் புற்றுநோய் என தெரிந்து கொண்டோம். எங்கள் வாழ்வில் பல கடினமான பாதைகளை கடந்து இருக்கிறோம் அதில் ஒன்றாக இதை பார்க்கிறோம். அது மட்டுமல்லாமல் நான் நேர்மறை எண்ணத்துடன் இருக்கிறேன். இதிலிருந்து தைரியமாக மீண்டு, வெளிவருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மேலும் எனக்கு பக்க பலமாக எனது முழு குடும்பமும் என் அருகில் இருப்பதால் உங்கள் அனைவரின் அன்பும் கடவுளின் ஆசிர்வாதமும் பிரார்த்தனைகளாலும் கண்டிப்பாக இதை கடந்து மீண்டுவருவேன்" என பதிவிட்டு இருக்கிறார்.

இதனைப் பார்த்து அவரது ரசிகர்கள் பலர், அவர் பத்திரமாக மீண்டு வர வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹீரோயின் அவதாரம் எடுக்கும் திவ்யா சத்யராஜ்! கலக்கல் ஹாட் போட்டோஸ்!