இந்திய நடிகைகளில் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்து, பிலிம்பேர் விருதையும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதையும் வென்றுள்ள பிரபல நடிகை தான் பிரக்யா ஜெய்ஸ்வால்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் பிறந்த பிரக்யா ஜெய்ஸ்வால், புனேவில் உள்ள சிம்பியோசிஸ் சட்டப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார் .
இதையும் படிங்க: சர்வதேச யோகா தினம்..! பாலிவுட் நடிகைகள் செய்த தரமான செய்கை..!

இதனை அடுத்து சிம்பியோசிஸ் பல்கலைக்கழகத்தில் தனது ஆரம்ப நாட்களில், அவர் பல்வேறு அழகுப் போட்டிகளில் பங்கேற்று சிறந்த மாடலானார்.

பின் 2014ம் ஆண்டில், கலை மற்றும் கலாச்சாரத் துறையில் தனது சாதனைக்காக சிம்பியோசிஸ் சமஸ்கிருத புரஸ்கார் விருதைப் பெற்றார்.

இதனை தொடர்ந்து 2014ம் ஆண்டு வெளியான 'விரட்டு' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதே ஆண்டில், நிஷாந்த் தஹியாவுடன் இணைந்து 'டிட்டூ எம்பிஏ' என்ற இந்தி திரைப்படத்திலும் நடித்து பாலிவுட்டிலும் அறிமுகமானார். பின், தெலுங்கு மொழியில் 2015ம் ஆண்டு வெளியான 'காஞ்சே' படத்தின் மூலம் அவர் மிகப்பெரிய ஸ்டாராக மாறும் வாய்ப்பை பெற்றார். இதற்காக அவருக்கு சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

2016ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான "காஞ்சே" படத்தில் நடித்ததற்க்காக, 63வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், CineMAA விருதுகள், ஜீ தெலுங்கு அப்சரா விருதுகள், TV9 தேசிய திரைப்பட விருதுகள் பெற்றார்.

2021ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான "அகண்டா" படத்தில் நடித்ததற்க்காக, சிறந்த நடிகைக்கான 10வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 படப்பிடிப்பில் சுவாரசிய சம்பவம்.. நெல்சனுடன் சேர்ந்து ரஜினி செய்த வேலையை பாருங்க..!