பாலிஷ் போட்ட பளபளக்கும் பளிங்கு கல் போல முகத்தை உடையவர் தான் ராசி கண்ணா.

பார்க்க அழகாக இருக்கும் இவர் உண்மையிலேயே குழந்தை உள்ளம் கொண்டவர் என்பது அவரது சிரிப்பில் தெரியும்.

கோபத்தில் உக்கிரமாய் இருப்பவர்கள் கூட இவரை கண்டால் குழந்தையாக மாறி விடுவார்கள்,

அந்த அளவிற்க்கு அவரது பேச்சு இருக்கும். என்னவென்றே தெரியவில்லை படம் சரியாக வசூல் ஆக மாட்டிக்கிறதே

என வருத்தப்படும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ராசியாக வந்தவர் தான் ராசிக்கண்ணா.

ஏனெனில் இவரது படத்தை பார்க்க கூட்டம் அப்படி அள்ளும். உதாரணமாக, அரண்மனை 4ல் "அச்சச்சோ" பாடலுக்காவே இவரை காண பல கோடி கூட்டங்கள் தியேட்டர் வாசலில் காத்திருந்தனர்.
இதையும் படிங்க: இளசுகளை கவரும் நடிகை சான்வி மேக்னா..! சேலையில் கிளாமரை கிளப்பும் கிளிக்ஸ்..!

இப்படி இருக்கும் ராசி கண்ணா, 2015ம் ஆண்டு 'பெங்கால் டைகர்' என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அதன் பின் 2016ம் ஆண்டு "சுப்ரீம்" படத்திலும், 2017ம் ஆண்டு "ஜெய் லவ குசா" என்ற படத்திலும், 2018ம் ஆண்டு "தோலி ப்ரேமா" போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை ஈர்த்தார்.

இதனை அடுத்து ரவிமோகனுக்கு ஜோடியாக "அடங்க மறு" என்ற படத்தில் நடித்தார்.
இதையும் படிங்க: நடிகை அவிகா கோர்தானுக்கு கல்யாணமா..! மாப்பிள்ளை யார் தெரியுமா..?