'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்' என்ற பாடலுக்கு இணங்க நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படம் என்றாலே ஓடி வந்து பார்க்கும் அளவிற்கு அவரது ஸ்டைலுக்கும் பேச்சுக்கும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இப்படிப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் நடித்த பல படங்களில் முக்கியமான படங்களாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுவது என்றால் தில்லுமுல்லு, முத்து, அருணாச்சலம், அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா உள்ளிட்ட படங்களை கூறலாம்.

இத்திரைப்படங்களை எத்தனை முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்தாலும் அத்தனை முறையும் அதனை சலிக்காமல் பார்க்கும் மக்கள் இங்கு உள்ளனர். ஏனெனில் ஒவ்வொரு திரைப்படத்திலும் "ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்" எனவும் "பாட்ஷா மாணிக் பாட்ஷா..." என்று சொல்வதும் "கொடுத்த வாக்கையும் கொடுத்த பொருளையும் திருப்பி வாங்குற பழக்கம் என் பரம்பரைக்கே கிடையாது" என்பதும் "ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்" என்பதும் "என் வழி தனி வழி சீண்டாதே" என பல டயலாக்குகள் இன்றும் மக்கள் மத்தியில் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த அளவுக்கு நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படம் என்றால் கொள்ளை பிரியம் என்று சொல்லும் கூட்டம் இன்றும் இங்கு உள்ளது.
இதையும் படிங்க: ஜெயிலர் 2வில் இணையும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்..! லோகேஷுக்கு டஃப் கொடுக்கும் நெல்சன் திலீப் குமார்..!

இப்படிப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் திரையுலக பயணம் என பார்த்தால் 1975ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" என்ற திரைபாத்தின் மூலம் அறிமுகமானார். பின் மூன்று முடிச்சு, காயத்திரி, 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஒரு ஆலையம், பில்லா, நட்சத்திரம், அன்புக்கு நான் அடிமை, காளி, நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி, ஜானி, பொல்லாதவன், முரட்டு காளை, நெற்றிக்கண், ராணுவ வீரன், என 1981 வரை மிகவும் கோபக்காரராகவும் ஆக்ரோஷ்க்காரராக மட்டுமே நடித்து வந்தார் ரஜினி காந்த்.

அதன் பின், 1981றிற்கு மேல் இனி தான் நகைச்சுவையாக நடிக்கப்போவதாக கூறி "தில்லு முல்லு" என்ற படத்தில் மிகவும் பிரமாதமாக யாரும் எதிர்பாராத வகையில் நகைச்சுவையாக நடித்தார். அதன் பின் வந்த படங்களான வேலைக்காரன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், கோடி பறக்குது, ராஜாதி ராஜா, மாப்பிள்ளை, சிவா, ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், பெரிய இடத்து பிள்ளை, அதிசிய பிறவி, தளபதி, தர்மதுரை, அண்ணாமலை, மன்னன், உழைப்பாளி, எஜமான், பாட்ஷா,முத்து, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி : தி பாஸ், எந்திரன், லிங்கா, கபாலி, பேட்ட, தர்பார், அண்ணாத்த, பாபா, ஜெயிலர், வேட்டையன், லால் சலாம் என பல படங்களில் தனது நகைச்சுவை திறனை வெளிக்காட்டி மக்களை கவர்ந்தார்.

இந்த நிலையில், தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "கூலி" திரைப்படத்தில் நடித்துள்ளார். அதேபோல் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் "ஜெயிலர் 2" திரைப்படத்தில் நடித்தும் வருகிறார். இப்படிஇருக்க, இன்றும் மாட்டு பொங்கல் என்றாலே "வந்தேண்டா பால் காரன்" பாடலை தமிழகம் முழுவதும் ஒலிக்க செய்யும் ரஜினியின் அண்ணாமலை திரைப்படத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த படத்தை அவரது பிறந்த நாளை முன்னிட்டு 4K தரத்தில் டிசம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் படத்தில் சந்தானம்..! 11 ஆண்டுகளுக்கு பின் இணையும் அட்ராசிட்டி கூட்டணி..!