எப்பொழுதும் ஒரு சில மனிதர்களை கண்டால் இவர்களைப் போல் வாழ வேண்டும் என்று தோன்றும். அப்படிப்பட்ட ஒருவர் தான் நடிகர் ராஜேஷ். இவர் தனது வாழ்க்கையில் சிறந்த ஆசிரியராக ஆரம்பித்து பின்பு நடிகர் ஆக மாறி சிறந்த படைப்பாளியாக ஒன்பது புத்தகங்களை எழுதி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவரிடம் பேசுபவர்கள் சற்று ஆறுதல் பெரும்படியாக பேசும் குணமுடைய ராஜேஷ், ஜோதிடம் சம்பந்தமான பல விஷயங்களை தொலைக்காட்சிகளில் பேசி அனைவரது மனதையும் ஆறுதல் படுத்துபவர்.

75 வயதான ராஜேஷ், சீரியல் மற்றும் சினிமாவில் 49 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து தனக்கான ஒரு இடத்தை பெற்று இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தி இருக்கிறார். கடந்த 2000 மாவது ஆண்டில் 'அழுக்கு வேட்டி' என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தார் ராஜேஷ், அதனைத் தொடர்ந்து 'சவுக்கடி' என்ற சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். பின்பு 2001ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அலைகள்' என்ற சீரியலில் 'கிருஷ்ணா' என்ற கேரக்டரில் பலரது மனதையும் கொள்ளை கொண்டு சென்றார்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2வில் இணையும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்..! லோகேஷுக்கு டஃப் கொடுக்கும் நெல்சன் திலீப் குமார்..!

இதனை அடுத்து கணவருக்காக, சுவாமி ஐயப்பன், ஆண்பாவம், தாயம், முடிவில்லா ஆரம்பம், களத்து வீடு, ரோஜா, சூரியவம்சம், டைகர் மாணிக்கம், ஜில்லுனு ஒரு காதல், கனா காணும் காலங்கள், கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து இருக்கிறார் நடிகர் ராஜேஷ். மேலும், 1987 முதல் 1991 வரை அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் நடிகர் ராஜேஷ். அடுத்ததாக அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் தலைவராகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பில் வகித்தவர். மேலும், தனது தந்தை, தாய், மனைவி கல்லறை இருக்கும் இடத்தில் தனக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் கல்லறை கட்டிவிட்டார். அதை ஒரு பேட்டியில் விரிவாக சொல்லியிருக்கிறார். அந்த கல்லறையில் எழுதப்பட வேண்டிய வாசகத்தை கூட முன்பே முடிவு செய்துவிட்டார். இப்படி பட்ட நடிகர் ராஜேஷ் நேற்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இப்படிப்பட்ட நல்ல மனிதர், எந்த வித தீய பழக்கமும் இல்லாத மனிதனுக்கு ஏற்கனேவே ஹார்ட் ஆபரேஷன் செய்து இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் ராஜேஷ், சமீபத்தில் துபாய் சென்று இருக்கிறார். அங்கு உணவு, தண்ணீர் என எதுவுமே அவருக்கு செட் ஆகவில்லை. அதனால் மிகவும் முடியாமல் தான் இந்தியா வந்திருக்கிறார். மேலும் அலைச்சல் காரணாமாகவும் பல டென்ஷன் காரணமாகவே திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், அடுத்தவாரம் அவர் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. அதற்காகவும் பல அலைச்சல்களில் இருந்துள்ளார்.
ஆனால் தனது மகனின் திருமணத்தை பார்க்காமலே உலகத்தை விட்டு மறைந்து போய்விட்டார் என பலரும் வருத்தம் தெரிவித்து வரும் வேளையில், சனிக்கிழமையான இன்று அதிகாலை நடிகர் ராஜேஷின் மகள் கனடாவில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கானது இன்று மாலை 3 மணியளவில் கீழ்ப்பாக்கத்தில் நடக்கிறது என்பதால் பல திரைபரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதுடன், அவரது மகன் மற்றும் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் நடிகர் ராஜேஷின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "என்னுடைய நெருங்கிய நண்பர் ராஜேஷ் அவர்கள் எனக்கு மட்டும் நண்பர் அல்ல..என்னை போன்ற பலருக்கும் எந்தவித பாகுபாடும் இன்றி நெருங்கிய நண்பராக இருந்தவர். அவரைப் பற்றி பார்த்தால் பெரிய ஹீரோவோ, பெரிய குணச்சித்திர நடிகரோ, டைரக்டரோ, அரசியல்வாதியோ கிடையாது. இருந்தாலும் தமிழக மாண்புமிகு முதலமைச்சரிலிருந்து, இசைஞானி இளையராஜாவிலிருந்து, எல்லா பிரபலங்கள் வரைக்கும் அவருடைய இறுதி அஞ்சலியில் பங்கு பெற்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள் என்றால் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதற்கு சான்று இதிலிருந்தே தெரிகிறது.

பார்க்க எளிமையாக இருந்த அந்த மனிதருக்கு அரசியல், விஞ்ஞானம், ஆன்மீகம், நோய் குணப்படுத்துதல் என அனைத்தையும் தேடி தேடி கற்றுத் தெரிந்தவர். தான் கற்றதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதிகம் பாடுபட்டவர். பலமுறை என்னை வந்து சந்தித்த நடிகர் ராஜேஷ், நீண்ட நாட்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் அதற்காக இந்த இந்த காரியங்களை செய்யுங்கள், சில உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள் என எனக்கு அறிவுரை வழங்குவார்.
இப்படி அனைவருடைய வாழ்க்கையிலும் நல்லதை மட்டும் நினைத்த மனிதன் என்று நம் மத்தியில் இல்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்" எனக் கூறிவிட்டு ராஜேஷின் மகன் மற்றும் மகளுக்கு ஆறுதல் கூறிச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.
இதையும் படிங்க: நடிகர் ராஜேஷ் மரணம்.. தனது நண்பருக்காக ரஜினிகாந்த் உருக்கம்..!